தமிழகத்தில் இயங்கி வரும் 150 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் யூனிட் அலுவலகங்களில் தினம் தோறும் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்கள் மட்டுமே 4000 வரை உள்ளது. இதுவரை புதிய வாகனங்களை பதிவு செய்யும்போது அந்த வாகனத்தை உரிமையாளர் அல்லது விற்பனை பிரதிநிதி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருந்த நிலையில் வாடிக்கையாளர்களிடம் டீலர்கள் இதற்காக தனி கட்டணம் வசூலித்து வந்தனர். இந்நிலையில் மோட்டார் வாகன புதிய சட்ட திருத்தத்தின்படி சொந்த பயன்பாட்டு வாகனங்கள் பதிவு செய்யும்போது அவற்றை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டுவர தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் இந்த சலுகை தமிழகத்தில் அமல்படுத்தப்படாமல் இருந்த நிலையில் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் தொடர்பாக தொடர்ந்த வழக்கில் இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்த சொந்த பயன்பாட்டுக்கான இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட புதிய வாகனங்களை பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் கொண்டு வர வேண்டாம். இந்த உத்தரவை டிசம்பர் 1 இன்று முதல் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…