விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘நீயா நானா’. இந்தநிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நீயா நானா கோபிநாத். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் பிறந்தவர்தான் கோபிநாத். திரையுலகம் மீதுள்ள ஆர்வத்தில் பல சேனல்களில் வாய்ப்பு கேட்டுள்ளார் ஆனால் அப்பொழுது எந்த ஒரு வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.
கோபிநாத் ரேடியோ சேனலில் ஆர்ஜெவாக வேலை செய்தார். பிறகு அவரின் திறமையை பார்த்து ராஜ்டிவி செய்தி வாசிப்பாளராக பணி புரிய அழைத்தது. அதன் பிறகு அவரின் திறமையை பார்த்து விஜய் டிவியில் ‘குற்றமும் பின்னணியும்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்ககூறினர். இதனைத் தொடர்ந்து அவருக்கு ‘நீயா நானா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.
தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப தலைப்புகள் வைத்து அதை மக்களிடம் சுவாரஸ்யமான முறையில் கொண்டு செல்வார் கோபிநாத். இந்நிகழ்ச்சியின் மூலமே அவர் ‘நீயா நானா’ கோபிநாத் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் இணைந்த புதிதில் கோபிநாத் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி உள்ளார். அப்போது எடுத்த ஒரு புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வெளியாகி உள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘கோபிநாத் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தாரா?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்….
'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…
உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…
“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…
திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…
நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…
இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு டி கிட்டு இயக்கத்தில் ரிலீஸ் ஆன மேதகு படத்தில் இசையமைப்பாளராக…