தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார். அவருக்கு பின் ஒருவர் வர முன்னணில் இருந்தவரின் மார்க்கெட் காலியாகும். அப்படி சந்திரபாபுவுக்கு அடுத்து முன்னணி நகைச்சுவை நடிகராக வந்தவர் நாகேஷ்.
தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
அதே போல நடிப்பில் பெண் சிவாஜி எனப் பாராட்டப்பட்டவர் மனோரமா. கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர் 1000க்கும் மேறபட்ட படங்களில் நடித்த ஒரே சாதனை படைத்த சாதனையாளராக வலம் வந்தார்.
நாகேஷும் மனோரமாவும் 60 களில் ஜோடியாக பல படங்களில் நடித்து கலக்கினர். இவர்களின் காமெடிக் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பால் நடிகர்களே தங்கள் காட்சிகளை குறைத்துக்கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு டிமாண்ட் இருந்தது. ஆனாலும் அவர்களின் சம்பளம் என்பது சொற்பமானதாகவே இருந்துள்ளது.
இதனால் குறைவான சம்பளத்துக்கு ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ஒரு படத்தில் நடிக்க வேண்டாம் என நாகேஷும், மனோரமாவும் சேர்ந்து முடிவெடுத்தனர். ஆனால், மனோரமாவுக்குத் தெரியாமலேயே நாகேஷ் அப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். இந்த நம்பிக்கை துரோகம் மனோரமாவுக்கு கோபத்தை ஏற்படுத்த இனிமேல் நாகேஷுடன் சேர்ந்து நடிக்கவேண்டாம் என முடிவெடுத்துள்ளார்.
அதன் காரணமாக சில வருடங்கள் அவர் நாகேஷுடன் ஜோடி போட்டு நடிக்கவில்லை. அப்போது வேறு நடிகைகளுடன் நடித்தார் நாகேஷ்.ஆனால் அந்த காம்பினேஷன் வொர்க் அவுட் ஆகவில்லை. அதன் பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் விவகாரத்தில் தலையிட்டு மனோரமாவின் சம்பளத்தை உயர்த்தும்படி தயாரிப்பாளரிடம் பேசியுள்ளார். அதன்பின்னர்தான் நாகேஷும், மனோரமாவும் இணைந்து சில படங்களில் நடிக்க ஆரம்பித்தனர்.
தமிழ் சினிமாவில் 80களில் லெஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர்…
பிரபல பாடகியான சுசித்ரா கடந்த 2003-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் ரிலீஸ் ஆன காக்க காக்க படத்தில் இடம்…
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சஞ்சனா நடராஜன். 2014 ஆம் ஆண்டு வெளியான நெருங்கி…
தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலிசோடா திரைப்படத்தில் ஏடிஎம் என்ற கதாபாத்திரத்தில்…
பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வரும் நிலையில் கார்த்திகை இரண்டாவது மனைவி…
தமிழ் சினிமாவில் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக வளம் பெறுபவர் வைரமுத்து. அவர் பாடல் எழுத தொடங்கிய பிறகுதான் தமிழ் சினிமாவில்…