Categories: CINEMA

500 கோடி சொத்துக்காக ராஜ்கிரண் மகளை வளைத்துபோட்ட முனீஸ் ராஜா..? ஜீனத் பிரியா மன்னிப்பு கேட்டது இதனால் தான்.. பகீர் கிளப்பிய பயில்வான்..

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90 காலகட்டத்தில் கிராமத்து ஹீரோவாக வலம் வந்தார் நடிகர் ராஜ்கிரண். அவர் கறியை எடுத்து உண்ணும் விதமே பலரின் ஃபேவரைட். இன்றும் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் வேஷ்டி கட்டியே படங்களில் நடித்து வருபவர், நேரிலும் அப்படியே எளிமையாகவே இருப்பார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார். மகளின் பெயர் ஜீனத் பிரியா.

#image_title

இவர் நாதஸ்வரம் சீரியலில் நடித்த முனீஸ் ராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு ராஜ்கிரண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேரி முனீஸ் ராஜை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்கிரண், ஜீனத் தனது சொந்த மகள் இல்லை என்றும், அவர்கள் இருவரும் தன் பெயரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். முனீஸ் ராஜ் மற்றும் ராஜ்கிரணின் மகள் இருவரும் திருமணத்திற்கு பிறகு வெளியிட்ட வீடியோவும் இணையத்தில் வைரலானது. பலரும் இந்த ஜோடிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், திருமணமான ஒரு வருடத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக ஜீனத் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். தனது தந்தையை மீறி முனீஸ் ராஜை திருமணம் செய்து கொண்டது மிகப்பெரிய தவறு எனவும், அவரை மிகவும் வேதனைப்படுத்தி விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பேசிய முனீஸ் ராஜ், ஜீனத்தின் பின்னணியில் இருப்பது யார் என உலகிற்கே தெரியும் என சூசகமாக குற்றம்சாட்டியுள்ளார்.

#image_title

இந்த சர்ச்சை தொடர்பாக பேசியுள்ள நடிகர் ராஜ்கிரண், முனீஸ் ராஜா, தினமும் மது அருந்திவிட்டு தனது மகளை அடித்து கொடுமை படுத்தியதாகவும், தன்னிடம் இருந்து பணம் வாங்கி வருமாறு சித்ரவதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். தன் மகள் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டு, ரத்த வாந்தி எடுக்கும் அளவுக்கு கொடுமைகளை அனுபவித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தகவல் வந்ததும், வேறு ஒருவர் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ததாகவும் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். ஃபேஸ் மூலம் வளர்ந்த இவர்களது காதல், திருமணமான ஒரு வருடத்திற்குள் கசந்து போனது.

#image_title

ராஜ்கிரண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று பிறகு பத்மஜா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். பத்மஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஜீனத் பிரியா இருந்த நிலையில், அவரது கணவரை பிரிந்து தனியே வாழ்ந்து வந்துள்ளார். அந்த சூழலில் தான் ராஜ்கிரண் அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பத்மஜாவின் மூலம் 500கோடி ரூபாய் சொத்துக்கு ஜீனத் அதிபதியாகியதாகவும், அதனை அடையவே முனீஸ் ராஜ் இத்தகைய செயலில் ஈடுபட்டதாகவும் பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். ஆனால் இது உண்மையா இல்லையா என்பது ஜீனத் வெளிப்படையாக கூறினால் மட்டுமே வெளிச்சத்திற்கு வரும்.

#image_title

Archana
Archana

Recent Posts

பாடகி ஸ்ரேயா கோஷல் ஒரு Fake சிங்கர்.. இவரையும் விட்டு வைக்கலையா..? என்ன என்னமோ சொல்றாங்களே சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

3 mins ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

32 mins ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

3 hours ago

சீரியல்ல மட்டும் தான் குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

3 hours ago

விதவைப் பெண்ணுடன் தான் திருமணம்.. சிவகுமாரின் ஜாதகத்தை சரியாக கணித்த பிரபல நடிகை..?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…

3 hours ago

குட்டை கவுன் அணிந்து.. செம கிளாமராக போஸ் கொடுத்த ‘காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை’.. வைரல் பிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…

4 hours ago