Categories: CINEMA

இளையராஜாவுக்கு கொடுக்காமல் ரஹ்மானுக்கு தேசிய விருது கொடுத்தேன்.. ஏன் தெரியுமா..? பாலு மகேந்திரா சொன்ன காரணம்..

இளையராஜாவின் வருகை இந்தி பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்களைக் கேட்க வைத்தது. ஆனால் ரஹ்மானின் வருகையோ இந்தி பேசும் ரசிகர்களையும் தமிழ் பாடல் பக்கம் ஈர்த்தது என சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் 1992 ஆம் ஆண்டு ரோஜா திரைப்படம் மூலமாக அறிமுகமானார் ஏ ஆர் ரஹ்மான். அதற்கு முன்னர் விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ரஹ்மானை இளையராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாலச்சந்தர் தன்னுடைய ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

#image_title

ரோஜா படத்தின் பாடல்கள் ரிலீஸ் ஆகி பட்டித் தொட்டியெல்லாம் அனைத்து வயதினரையும் முனுமுனுக்க வைத்தன. இந்த படத்துக்காக ஏ ஆர் ரஹ்மான் தேசிய விருதை வென்றார். அந்த தேசிய விருது கமிட்டியின் தலைவராக இருந்த இயக்குனர் பாலுமகேந்திரா ரஹ்மானுக்கு தேசிய விருது கிடைத்தது சம்மந்தமாக ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் அளித்த ஒரு நேர்காணலில் “ அந்த ஆண்டு இறுதிப் பட்டியலில் இளையராஜாவும் ரஹ்மானும் சம அளவில் ஓட்டு வாங்கி இருந்தனர். அதனால் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் ஜூரியான என்னிடம் வந்தது. எனக்கு இரண்டு ஓட்டுகள் உண்டு. அப்போது நான் கண்களை மூடி கடவுளிடம் வேண்டினேன், எனக்கு சரியான முடிவெடுக்கும் அறிவைக் கொடு என.

#image_title

நான் என்னுடைய இரண்டு ஓட்டுகளையும் ரஹ்மானுக்கே செலுத்தினேன். ஏனென்றால் ஒரு 22 வயது பையன் இளையராஜா எனும் மேதைக்குப் போட்டியாக வந்து நிற்கிறான். அவன் பின்னால் ஆஸ்கர் கூட வாங்கலாம். ஆனால் அந்த 22 வயது பையனுக்கு இந்த விருது கிடைக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

நான் சென்னை வந்ததும் இளையராஜாவிடம் நான் எடுத்த முடிவை சொன்னேன். அவர் என் கைகளைப் பற்றிக் கொண்டு “நீங்கள் சரியான முடிவை எடுத்துள்ளீர்கள்’ என சொன்னார்கள். இளையராஜாவை எல்லோருக்கும் ஒரு இசை மேதையாக தெரியும். ஆனால் அவரை ஒரு நண்பனாக ஒரு பரந்த மனதுள்ளவராக எனக்கு தெரியும்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

நடிகை ஜோதிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?.. அச்சு அசல் ஒரே மாதிரி இருக்காங்களே.. வைரல் புகைப்படம்..!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் நடிகை ஜோதிகா. 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 18…

6 hours ago

விஜய் மீது உள்ள கோபத்தை தணிக்க ‘GOAT’ படத்தில் வெங்கட் பிரபு செய்த வேலை.. அதை பார்த்து குளிர்ந்து போன பிரேமலதா விஜயகாந்த்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

7 hours ago

நான் ஒரு நல்ல நடிகர்.. ‘எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க சார்’.. ஓப்பனாகவே வாய்ப்பு கேட்ட காதல் கொண்டேன் பட நடிகர்..!

நீண்ட இடைவெளிக்குப்பின் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்த சுதீப் சரங்கி அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனுஷ் நடிப்பில்…

7 hours ago

நடிகர் சங்க கட்டிடத்திற்கு தாராளமாக பணத்தை அள்ளிக் கொடுத்த நடிகர் தனுஷ்.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிடம் தொடர்பான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக…

9 hours ago

அடப்பாவிகளா..! விட்டா நசுக்கி சாவடிச்சிடுவீங்க போலையே.. ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கித் தவித்த ராம்சரண்.. வைரலாகும் வீடியோ..!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ராம்சரன். மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் என்று…

9 hours ago

வாழ்க்கையே வெறுத்துடுச்சு.. என்னால தான் இவன் சூசைட் அட்டென்ட் பண்ணான்.. மனம் திறக்கும் பரிதாபங்கள் கோபி சுதாகர்..!

Youtube கலக்கி வரும் பிரபலங்கள் தான் கோபி மற்றும் சுதாகர் இவர்கள் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியானது மிகவும் வைரலாகி வருகின்றது.…

10 hours ago