ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து ஆசிய கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவனாக ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பை வாங்க மாட்டோம் என்று இந்திய அணி மறுப்பு தெரிவித்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை. ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐசிஐ இடம் இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆசிய கோப்பை மற்றும் பதக்கங்களை கொடுக்க தயார் என்றும் ஆனால் ஒரு கண்டிஷன் என்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வி கூறியுள்ளார். மேலும் முறையான விழா ஏற்பாடு செய்தால் மட்டுமே சூர்ய குமார் யாதவ் மற்றும் அவருடைய வீரர்கள் பதக்கங்களை பெறுவார்கள். அங்கு அவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்க வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் ஏற்பாட்டாளர்களிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இருக்கும் அரசியல் உறவுகளை கருத்தில் கொண்டால் அத்தகைய ஏற்பாடு செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…