#image_title
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால் படங்களில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.
எம் ஜி ஆரின் புகழ் திமுகவுக்கும், திமுகவின் தொண்டர்படை எம் ஜி ஆரின் சினிமா வெற்றிக்கு பரஸ்பரம் உதவின. ஆனால் ஒரு கட்டத்தில் எம் ஜி ஆர் திமுகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கினார். திமுகவின் பெயரோடு அண்ணா வை சேர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கப்பட்து.
அந்த காலகட்டத்தில் எம் ஜி ஆருக்கு திரையுலகில் மிகப்பெரிய வெற்றி தேவைப்பட்டது. அப்போது அவரே தன்னுடைய சொத்துகளை எல்லாம் அடமானம் வைத்து எடுத்து வெளியிட்ட படம்தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. அந்த படத்தை மிகப் பிரம்மாண்டமாக வெளிநாடுகளில் படமாக்கினார், எம் ஜி ஆர்.
படத்தில் நான்கு கதாநாயகிகள், மூன்று வில்லன்கள் என கமர்ஷியல் பேக்கேஜாக உருவாக்கினார். படம் ரிலீஸ் ஆனபோது விளம்பரத்துக்கு ஒரு போஸ்டர் கூட ஒட்டப்படவில்லை. அதற்குக் காரணம் அப்போது போஸ்டர்கள் மீதான வரியை கலைஞர் தலைமையிலான அரசு அதிகரித்திருந்தது.
இப்படி பல சிக்கல்களுக்கு நடுவே உருவான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தைப் பார்க்க சென்ற ரசிகர்கள் முதல் பிரேமிலேயே ஆச்சர்யப்படத்தக்க வகையில் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவில் தன்னுடைய கட்சிக் கொடியை இணைத்து சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் எம்ஜி ஆர். அந்த காட்சி திரையில் தோன்றிய போதே ரசிகர்கள் அபாரமான கரகோஷத்தை தொடங்கினர். அதுவே அந்த படத்தின் வெற்றியை உறுதி செய்துவிட்டது.
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…
நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…
நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…
விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…