“ஒரு தரமான கதையை சிறப்பான முறையில் தயாரித்து கொடுத்தால், மக்கள் மத்தியில் அது நல்ல வரவேற்பை பெரும்” என்பது நிதர்சனமான உண்மை. இதனடிப்படையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் ‘மேற்கு தொடர்ச்சி மலை. இத்திரைப்படத்தை புதுமுக இயக்குனர் லெனின் பாரதி இயக்கியிருந்தார். நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருந்தார்.
இத்திரைப்படத்தில் காதநாயகனாக புதுமுக நடிகர் ஆண்டனி ராஜ் நடித்திருந்தார். போலித்தனம் அல்லாத எளிமை மிக்க வாழ்க்கை, நிலத்தோடும் காற்றோடும் மொழியோடும், அதிகாரத்தால் சுரண்டப்படுகிற மனித முகங்கள் என எளிமையின் அனுபவத்தை மக்களுக்கு கொடுத்தது ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படத்திற்கு பல விருதுகள் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இத்திரைப்படத்தில் பணியாற்றிய எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தாவான ராசீ.தங்கதுரை என்பவர் இருதய பிரச்சினை காரணமாக திடீரென மரணமடைந்துள்ளார். தேனி மாவட்டம் கதிர்நரசிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசீ.தங்கதுரை. ராமையா – சீனியம்மாள் தம்பதியரின் மகனான தங்கதுரை, தாய், தந்தை மீது இருந்த பாசத்தால் தன்னுடைய பெயரில் பெற்றோரின் பெயரை சேர்த்துக்கொண்டார்.
பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த ராசீ.தங்கதுரை இலக்கியத்தின் மீதிருந்த ஆர்வத்தால் சிறு வயதிலேயே கவிதை, கதை எழுதுவதில் நாட்டம் கொண்டு சுமார் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரின் ‘பொய்யா குலக்கொடி’ என்ற நாவல் பிரபலமானது. தற்பொழுது இவரது மறைவுக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…
சின்னத்திரை நடிகை வைஷ்ணவி சுந்தர் தொலைக்காட்சி சீரியல்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி…