சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி மறக்குமா நெஞ்சம் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக வெள்ளி, தங்கம் மற்றும் வைரம் என 2000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டன. டிக்கெட் பெற்றுக் கொண்டு ரசிகர்கள் அனைவரும் இசை கச்சேரி நடைபெறும் இடத்திற்கு சென்ற நிலையில் அங்கு சரியான பார்க்கின் வசதி இல்லாததால் பல மணி நேரம் காத்திருந்தனர்.
அதேசமயம் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் பலருக்கும் இருக்கைகள் கிடைக்காமல் போனது. பலரும் கூட்டத்திற்குள் சிக்கி வெளியே வர முடியாமல் திணறியதாகவும் ரசிகர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி ஏற்பாட்டாளர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட்டை பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7000 பேர் டிக்கெட்டை ஸ்கேன் செய்து அனுப்பி உள்ளதாகவும் 3000 பேரின் டிக்கெட்டுகளை பரிசீலனை செய்து ஆயிரம் பேருக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் மற்ற மொழிகளை விட மலையாள சினிமா எப்போதுமே ஒருபடி முன்செல்லக் கூடியதாக உள்ளது. அங்கு கமர்ஷியல் படங்களுக்கு…
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…