Categories: CINEMA

‘மஞ்சுமேல் பாய்ஸ்’ படம் பண்ண வேலை.. அதிரடி முடிவெடுத்த அமலாக்கத்துறை.. கடும் அதிர்ச்சியில் மலையாள சினிமா..!

மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் 200 கோடி வசூல் செய்து விட்டதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்த நிலையில் அமலாக்கத் துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மலையாள சினிமாவில் இந்த வருடம் ஆரம்பத்தில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் மஞ்சுமேல் பாய்ஸ். இந்த திரைப்படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் சக்க போடு போட்டது, வசூலிலும் மிகப்பெரிய அளவு சாதனை செய்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 100 மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

வர்த்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் வெற்றியைப் பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் மீது நிதி மோசடி புகார் சமீபத்தில் அளிக்கப்பட்டது. அரூரைச் சேர்ந்த சிராஜ் என்பவர் படத்தின் பின்னணியில் உள்ள தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய நபர்களால் தான் ஏமாற்றப்பட்டதாகவும், 7 கோடி ரூபாய் இந்த படத்திற்காக நான் முதலீடு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் படம் வெற்றி பெற்ற நிலையில் தனக்கு அளித்த வாக்குப்படி 40% பணத்தை இதுவரை கொடுக்கவில்லை என்றும், இந்த மோசடியால் 47 கோடி வரை தனக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் புகார் அளித்திருந்தார். இதை தொடர்ந்து அமலாக்கத் துறையினர் இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய போது சில விஷயங்கள் வெளியாகியிருக்கின்றது.

அதாவது படத்தின் தயாரிப்பாளர்கள் படம் 200 கோடி வசூல் செய்து விட்டதாக கூறியிருந்த நிலையில் உண்மையிலேயே மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் 200 கோடி வசூல் செய்ததா? என்று அனைவருக்கும் சந்தேகம் இருந்துள்ளது. படத்தின் ப்ரோமோஷன்காக இதுபோன்ற செயல்களை பட தயாரிப்பாளர்கள் செய்திருக்கின்றார்.

இதனால் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக்கொண்ட தயாரிப்பாளர் சங்கம் மலையாள சினிமாவில் இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் ஒரு நோட்டீசை வெளியிட்டு இருக்கின்றது. அதாவது படத்தின் ப்ரோமோஷன்காக தப்பான வசூலை மக்களுக்கு காட்ட  வேண்டாம் என்று அறிவித்து இருக்கிறார்கள். மேலும் அமலாக்கத் துறையினர் மஞ்சுமேல் பாய்ஸ் பட குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

38 நிமிடங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

1 மணி நேரம் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

2 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

4 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

6 மணி நேரங்கள் ago