பண்டிகை கொண்டாட்டத்தில் ஏற்பட்ட துயரம்… இரண்டு நாட்களில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்…!

Spread the love

தெலுங்கானா மாநிலம்  ஹைதராபாத்தில்  கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடந்த திருவிழா கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட மின்விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹைதராபாத் மற்றும் காமா ரெட்டி மாவட்டங்களில் பலர் உயிரிழந்துள்ளனர். இதில் ஹைதராபாத் நகரில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் விநாயக மண்டபம் அமைக்கும் பொழுது ஒருவர் பலியாகியுள்ளார். இதனையடுத்து பந்தளகுடா பகுதிகள் சிலையை தூக்கிச் செல்லும்போது மின்கம்பியில் உரசியதால் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இதில் மற்றொரு சம்பவத்தில் ராமந்தப்பூரில் கிருஷ்ணரின் தேரை இழுத்துச் செல்லும்போது மின்கம்பி உரசியதில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் படுகாயமாடைந்தனர். மேலும் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதேபோல் காமா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஆரேபள்ளி பகுதியில் விநாயகர் சிலையை தூக்கிச் செல்லும்  போது லட்சுமி நாராயணன் (25)என்பவர் மின்சாரம் தாக்கி பலியானார். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது மின்கம்பம் உரசி இரண்டு நாட்களில் ஒன்பது பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Meena

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

9 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

10 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

10 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

10 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

10 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

11 மணத்தியாலங்கள் ago