பீகாரின் சாப்ரா மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. மஞ்சி காவல் நிலையப் பகுதியின் தக்ஷின் தோலா பகுதியில் ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இறந்தவரின் பெயர் சூரஜ் பிரசாத், அவருக்கு 55 வயது. தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சூரஜ் பிரசாத் பல வருடங்களாக கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். பத்து வருடங்களுக்கு முன்பு அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளிடமிருந்து பிரிந்து சென்றார். அவரது குடும்பம் சப்ரா நகரில் வசிக்கிறது, அதே நேரத்தில் சூரஜ் கிராமத்தில் விவசாயத்தை நிர்வகித்து வந்தார்.
இந்நிலையில் சம்மபவத்தன்று அவரது மருமகன் சுர்ஜித் குமார் வழக்கம் போல் உணவு வழங்க வந்தபோது, அறையில் உள்ள படுக்கை கொசு வலையால் மூடப்பட்டிருப்பதைக் கண்டார், ஆனால் சூரஜ் பிரசாத்தின் உடல் தரையில் நிர்வாணமாக கிடந்தது. குற்றவாளிகள் அவரை கத்தியால் குத்தியதோடு மட்டுமல்லாமல், அவரது அந்தரங்க உறுப்புகளையும் துண்டித்துள்ளனர். மேலும், அவரது முகத்தில் அமிலம் ஊற்றப்பட்டு, அவரது கண்கள் பிடுங்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மஞ்சி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, முழு வீட்டையும் சீல் வைத்து விசாரணையைத் தொடங்கினர். சிறிது நேரத்திற்குப் பிறகு, சரண் எஸ்எஸ்பி டாக்டர் குமார் ஆஷிஷ் நேரில் சம்பவ இடத்திற்கு வந்தார். தடயவியல் குழு வரவழைக்கப்பட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. காவல்துறையினரின் ஆரம்ப விசாரணையில், தனிப்பட்ட தகராறு அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…