#image_title
எம் ஜி ஆர் சினிமாத் துறையில் உச்ச நட்சத்திரமாக கோலோச்சியதற்கும், அரசியலில் வந்த பிறகு வீழ்த்த முடியாத வெற்றியைப் பெற்றதற்கும் அவர் படங்களில் இடம்பெற்ற பாடல்களும் முக்கியக் காரணம். தன் படங்களில் ஏதாவது ஒரு பாட்டையாவது மக்களுக்கு நற்கருத்துகளை போதிக்கும் விதமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வார்.
அதற்காக பாடல்களை எழுத தரமான கவிஞர்களை தன் படங்களுக்கு தேர்வு செய்வார். எம் ஜி ஆர் படங்களுக்கு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். மருதகாசி, பாபநாசம் சிவன், கண்ணதாசன், வாலி போன்றோர் அதிகளவில் பாடல்களை எழுதியுள்ளார்கள்.
இதில் குறைவான பாடல்களையே எழுதினாலும் காலத்தால் அழியாத பல பாடல்களைக் கொடுத்தவர் தஞ்சை ராமையாதாஸ். எம் ஜி ஆரின் மலைக்கள்ளன் படத்தில் தஞ்சை ராமையதாஸ் பாடல்களை எழுத ஒப்பந்தம் ஆனார். இந்த படத்துக்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் கதை எழுத, கருணாநிதி வசனம் எழுதினார்.
இந்த படத்தில் இடம்பெற்ற எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த உலகிலே என்ற பாடல் இன்றளவும் அதிகம் கேட்கப்படும் பாடல்களில் ஒன்று. இந்த படத்திற்கு பாடல் எழுத வந்த கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் ஒரு பாடலின் பல்லவியை எழுதி முடித்து சரணம் எழுத தொடங்கிய போது இயக்குனர் ராமுலுவுடன் பிரச்சனை ஏற்பட கோபித்துக்கொண்டு வெளியேறிவிட்டார். அதையறிந்த எம் ஜி ஆர் ராமையாதாஸிடம் சென்று சமாதானம் பேச முயன்றுள்ளார்.
எம் ஜி ஆர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதை ராமையாதாஸ் ஏற்க மறுத்துவிட்டாராம். ஆனால் பல்லவியில் இடம்பெற்ற வரிகள் எம் ஜி ஆருக்கு மிகவும் பிடித்து விட்டதால் அதை விடுத்து வேறு பாடலை எழுதவும் மனம் வரவில்லையாம். அதன் பின்னர்தான் எம் ஜி ஆர் கோவை அய்யாமுத்து என்ற கவிஞரிடம் இந்த பல்லவியை மாற்றாமல் பாடலை தொடர்ந்து எழுதுங்கள் எனக் கேட்டுக்கொண்டாராம்.
அப்படி உருவான பாடல் தான் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடல். வெளியாகி கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் பெயர் சொல்லும் ஒரு பாடலாக அது இருப்பதன் மூலம் எம் ஜி ஆருக்கு பாடல் வரிகள் மேல் இருந்த அறிவு தெளிவாகிறது.
ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…
டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…
முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…