ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் சீமா நாயக் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ராகேஷுக்கும் சீமாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜிகினி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராகேஷ் சீமாவிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று ராகேஷ் மது குடிப்பதற்கு சீமாவிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் இரவு சீமா தூங்கிய பிறகு ராகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலை கண் விழித்த சீமா ராகேஷ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் சீமாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…