கள்ளக்குறிச்சி மாவட்டம் குடியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்(33). கடந்த 2021 பிப்ரவரி 17-ஆம் ரங்கநாதன் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதற்கு உடந்தையாக அதே கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் (48) செயல்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் ரங்கநாதன் மற்றும் பாண்டுரங்கன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், ரங்கநாதனுக்கு ஆயுள் சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாண்டுரங்கனுக்கு ஆயுள் சிறை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதிஉத்தரவிட்டார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…