#image_title
சினிமா பட பாணியில் காதலியை கிண்டல் செய்த நபரை கன்னட நடிகர் தர்ஷன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தர்ஷன் இவர் நடிகை பவித்ராவை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நடிகை பவித்ரா கௌடாவுக்கு ரேணுகா சுவாமி என்பவர் ஆபாசமான செய்திகளை அனுப்பி தொல்லை செய்துள்ளார். இதனால் நடிகர் தர்ஷன் அவரை கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு நகர கமிஷனர் பி தயானந்தா தெரிவித்திருந்ததாவது “ஜூன் ஒன்பதாம் தேதி இந்த கொலை நடந்துள்ளது. ரேணுகா சுவாமி சித்தூரை சேர்ந்த மெடிக்கல் ஷாப்பில் பணியாற்றுபவர். இந்த கொலை வழக்கில் பத்துக்கும் மேற்பட்ட ஒரு கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் தர்ஷன் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்கு பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மைசூரில் நேற்று காலை 8:30 மணி அளவில் விஜயநகர் ஏ சி பி சந்தானத்தால் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் படப்பிடிப்பிற்காக மைசூரில் உள்ள ரேடிசன் ப்ளூ பிளாசா ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில் அங்கு வைத்து கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
தற்போது வரை கிடைத்த விசாரணையில் நடிகர் தர்ஷனின் பவுன்சர்கள் ரேணுகா சுவாமியை அவர் முன்னிலையில் கொன்று அவர் வசிக்கும் காமாட்சி பாளையத்தில் உடலை போட்டுவிட்டு வந்ததாக கூறப்படுகின்றது. சடலத்தை அங்கிருந்த நாய்கள் தின்று கொண்டிருந்த போது அதைப் பார்த்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி காவல்துறையினருக்கு தகவல் அளித்திருக்கிறார்கள்.
பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை செய்து இருக்கிறார்கள். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தான் ரேணுகா சுவாமி சமூக வலைதள கணக்கு ஒன்றின் மூலமாக நடிகை பவித்ரா கௌடாவுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் பவித்ரா கௌடாவின் சமூக ஊடக கணக்குகளை பரிசோதனை செய்த நிலையில் பவித்ரா கௌடாவுக்கு ஆபாசமான செய்தி அனுப்பியது உறுதியானது.
அதுமட்டுமில்லாமல் நடிகை பவித்ராவுக்கும் தர்ஷனுக்கும் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாகவும் 10 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் நவம்பர் 2023 இல் பவித்ரா தனது மகள் குஷியின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோவை பகிர்ந்து இருந்தால் அதில் கூட தர்ஷன் அவருக்கு கேக் வெட்டி அவருடன் நடனம் ஆடுவதை நம்மால் பார்க்க முடிந்தது.
இந்நிலையில் பவித்ராவிடம் தவறாக பேசிய ரேணுகா சுவாமியை தர்ஷனின் பவுன்சர்கள் கொன்று உடலை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணையில் இந்த தகவல் வெளியாகி இருக்கின்றது. காவல்துறையினர் நடிகர் தர்ஷனை கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…