90’s காலகட்டத்தில் பிரபல வில்லனாக வலம் வந்தவர் பொன்னம்பலம். இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். நாட்டாமை படத்தில் பொன்னம்பலத்தின் நடிப்பை யாராலும் மறக்க முடியாது. முதலில் அவர் சண்டை கலைஞராகத்தான் இருந்தார்.
ஆனால் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் மூலம் முழு நேர நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், பெரிய மருது, நாட்டாமை, மாநகர காவல் என ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தார். கடந்த 1990-ஆம் ஆண்டு மைக்கேல் மதன காமராஜன் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சீனிவாச ராவ் இயக்கினார்.
சமீபத்தில் பொன்னம்பலம் அளித்த பேட்டியில் கூறியதாவது, மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் அணுகினார். நான் சண்டை காட்சிகள் இல்லாமல் படத்தில் நடித்தால் 200, 300 தான் சம்பளம் தருவார்கள். நல்ல சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன் எனக் கூறினேன். அதைப் பற்றி தயாரிப்பாளரிடம் பேசிக்கொள் என இயக்குனர் கூறிவிட்டார். நானும் தயாரிப்பாளரிடம் சென்று கராராக ஒரு நாளைக்கு 2000 வீதம் கொடுத்தால் தான் நடிப்பேன் என பேசினேன்.
அதனை கேட்டதும் தயாரிப்பாளர் பெருமூச்சு விட்டு நல்லவேளை நீ 5000 ரூபாய் கேட்பாய் என நினைத்தேன் என கூறினார். நான் போட்ட கணக்கை விட அவர்கள் அதிகமாக தான் நினைத்து வைத்திருந்தார்கள். நான்தான் 2000 என முதலிலேயே கூறிவிட்டேன். நான் கூறியதால் பத்து நாளைக்கு 20000 என்ற கணக்கில் என்னிடம் பணத்தை தயாரிப்பாளர் கொடுத்தார். அப்படி இல்லை என்றால் அந்த படத்தில் நடிக்க ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பேன் என கூறியுள்ளார்.
பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…
நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…
இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…
ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…
டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…