தமிழ் சினிமாவின் 90களில் தொடங்கி இன்றுவரை சூப்பர் ஸ்டார் என்று அனைவர் மத்தியிலும் இடம் பிடித்த நடிகர் தான் ரஜினிகாந்த. இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். உலகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் என பல பிரபலங்களும் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் 375 கோடி வசூல் செய்திருந்த நிலையில் தற்போது வரை 525 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த படத்தின் வெற்றியாள் மகிழ்ச்சியில் இருக்கும் நெல்சன் படம் இந்த அளவிற்கு வெற்றி பெறும் என நினைத்து இயக்கவில்லை படம் நன்றாக வரவேண்டும் என்றுதான் நினைத்து எடுத்தோம் படத்தின் வெற்றிக்கு காரணம் ரஜினியின் திரையால் மை தான் என கூறி இருந்தார். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிக்கு நேற்றைய பிஎம்டபிள்யூ X7 காரை பரிசாக வழங்கி இருந்தார். இந்த காரின் விலை சுமார் 1.25 கோடி ஆகும்.
இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குனர் நெல்சன் திலீப் குமாரை நேரில் சந்தித்து காசோலையை கொடுத்த கலாநிதி மாறன் நெல்சனுக்கு புத்தம் புதிய போர்ஷே காரை பரிசாக வழங்கினார். ரஜினிக்கு வழங்கிய காரை விட நெல்சனுக்கு வழங்கிய காரின் மதிப்பு பல மடங்கு உயர்வு . அதாவது இதன் விலை சுமார் 1.40 கோடிக்கும் அதிகமாகும். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…