மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஒன்றான சாஸ்த்ர சீமா பால் (SSB) பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள்:
மொத்தம் 827 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கான்ஸ்டபிள் நிலையில் டிரைவர், வெயிட்டர் உள்ளிட்ட 11 பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணிகளுக்குத் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை ஊதியம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி மற்றும் தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் பெற்றிருப்பது அவசியம். தகுதியான நபர்கள் உடற்தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஏப்ரல் 20 ஆகும். தகுதியுள்ள நபர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…