மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “தக் லைஃப்”. இத்திரைப்படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக் உட்பட பலரும் நடிப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. மேலும் சிம்புவும் இத்திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஜெயம் ரவி இத்திரைப்படத்தில் இருந்து வெளியேறியதாக சமீபத்தில் ஒரு தகவல் வந்தது. அதாவது சிலம்பரசன் இந்த புராஜெக்ட்டிற்குள் நுழைந்தவுடன் ஜெயம் ரவி விலகியதாக கூறப்பட்டது.
ஜெயம் ரவியை தொடர்ந்து துல்கர் சல்மானும் இத்திரைப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. அதாவது துல்கர் சல்மான் ஒரு நாள் மணிரத்னத்தை சந்திக்க வந்தபோது, அவரது மேனேஜரை வைத்து பேசவைத்தாராம். இது துல்கர் சல்மானுக்கு அவமானமாக இருந்ததாம். ஆதலால் துல்கர் இந்த புராஜெக்ட்டில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகிய இருவரும் மீண்டும் “தக் லைஃப்” திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மணிரத்னத்தின் மனைவியான சுஹாசினி மணிரத்னம், ஜெயம் ரவி, துல்கர் ஆகிய இருவரையும் சந்தித்து “எந்த பிரச்சனையாக இருந்தாலும் தீர்த்துக்கொள்ளலாம். மீண்டும் இந்த புராஜெக்ட்டிற்குள் வாருங்கள்” என சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினாராம். ஆதலால் ஜெயம் ரவியும் துல்கர் சல்மானும் இத்திரைப்படத்தில் மீண்டும் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகனாக நடித்திருந்த மேத்யூ தாமஸ் குடும்பம் விபத்தில் சிக்கிய நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார்.…
பிரபல சீரியல் நடிகையான ரச்சிதா மகாலட்சுமி சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கும் க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.…
சக்திவேல் சீரியலில் நடித்து வரும் நடிகை சந்தியாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி…
மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மத்திய அரசு சார்பாக பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து…
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில்…
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார்.…