அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle), உலகம் முழுவதும் சுமார் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் இந்தியாவில்தான் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மொத்தம் நீக்கப்பட்டவர்களில் 12,000-க்கும் மேற்பட்டோர் இந்தியாவின் பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிரடி பணிநீக்கத்திற்குப் பின்னால் ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆரக்கிள் நிறுவனம் தனது அடுத்தகட்ட வளர்ச்சியாக ஏஐ தரவு மையங்களை (AI Data Centers) அமைப்பதற்காக ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்துடன் சுமார் 156 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரம்மாண்ட ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. இதற்கான முதலீடுகளைச் சமாளிக்கவும், நிறுவனத்தின் செலவினங்களைக் குறைக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அதிகாலை 6 மணிக்கே மின்னஞ்சல் மூலம் இந்தத் தகவல் அனுப்பப்பட்டது ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் பணித்திறன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், நிறுவனத்தின் கட்டமைப்பு மாற்றமே காரணம் என்றும் ஆரக்கிள் தெரிவித்துள்ளது. வரும் மாதங்களில் இந்தியாவில் மேலும் ஒரு கட்ட பணிநீக்கம் இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி ஐடி ஊழியர்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…