அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle), உலகம் முழுவதும் சுமார் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் இந்தியாவில்தான் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மொத்தம் நீக்கப்பட்டவர்களில் 12,000-க்கும் மேற்பட்டோர் இந்தியாவின் பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிரடி பணிநீக்கத்திற்குப் பின்னால் ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆரக்கிள் நிறுவனம் தனது அடுத்தகட்ட வளர்ச்சியாக ஏஐ தரவு மையங்களை (AI Data Centers) அமைப்பதற்காக ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்துடன் சுமார் 156 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரம்மாண்ட ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. இதற்கான முதலீடுகளைச் சமாளிக்கவும், நிறுவனத்தின் செலவினங்களைக் குறைக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அதிகாலை 6 மணிக்கே மின்னஞ்சல் மூலம் இந்தத் தகவல் அனுப்பப்பட்டது ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் பணித்திறன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், நிறுவனத்தின் கட்டமைப்பு மாற்றமே காரணம் என்றும் ஆரக்கிள் தெரிவித்துள்ளது. வரும் மாதங்களில் இந்தியாவில் மேலும் ஒரு கட்ட பணிநீக்கம் இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி ஐடி ஊழியர்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…