தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகளும், புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி சார்பில் பிரபல சினிமா இயக்குநரும், பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்புவின் கணவருமான சுந்தர் சி இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுகவின் மூத்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராகக் கடும் சவாலை அளிக்கும் நோக்கில் இவரைத் தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி இறக்கியுள்ளது.
மதுரையில் முதன்முறையாக வேட்பாளராகச் செய்தியாளர்களைச் சந்தித்த சுந்தர் சி, மதுரை மீனாட்சி அம்மன் அருளாலும், மக்களின் ஆதரவாலும் தாம் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையோடு பேசினார். சினிமாவுக்காகப் பல பேட்டிகள் கொடுத்திருந்தாலும், அரசியல் களம் தமக்கு முற்றிலும் புதிது என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், செய்தியாளர் சந்திப்பின்போது தனது கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களின் பெயர்களைக் வரிசையாகக் குறிப்பிடுவதில் அவர் கடும் தடுமாற்றத்தைச் சந்தித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
கூட்டணித் தலைவர்களின் பெயர்களைச் சொல்லத் தெரியாமல் சுந்தர் சி தவித்தபோது, பின்னால் இருந்த புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் ஒவ்வொரு பெயராக எடுத்துக் கொடுத்தார். அமமுக என்பதற்குப் பதிலாக ‘அமுமுக’ என்று தவறாகக் குறிப்பிட்டதுடன், ஜான் பாண்டியன் மற்றும் திருமாறன் போன்ற தலைவர்களின் கட்சிப் பெயர்களைச் சொல்ல முடியாமல் திணறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “ஒரு இயக்குநருக்கே டப்பிங் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதே” என நெட்டிசன்கள் கிண்டலாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…