விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து, தற்போது ஏழாவது சீசன் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கினர். இவர்களில் 5 போட்டியாளர்கள் வெளியேறி இருக்க, 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு முற்றிலும் வித்தியாசமாக இந்த சீசன் அமைந்துள்ளது.
பிக் பாஸ் வீடாக இரண்டாக பிரிந்ததிலிருந்ததே டாஸ்க் விளையாட்டிலும் பல புதுமைகள் இருந்து வருகிறது. போட்டியாளர்கள் தனித்தனியாக பிரிந்து விளையாடாமல் கூட்டம் கூட்டமாக சேர்ந்து ஒவ்வொருவராக தோற்கடித்து வருகின்றனர். அப்படித்தான் நேற்றைய எபிசோடிலும் நடந்தது. எவிக்ஷன் லிஸ்டில் இருந்த பிரதீப் தான் அங்கிருந்த ஹவுஸ் மீட்கலால் டார்கெட் செய்யப்பட்டார். ஜோதிகா ,பூர்ணிமா, மாயா, ரவீனா என பல பெண் போட்டியாளர்கள் அவருக்கு எதிராக ரெட் கார்ட் கொடுக்க வலியுறுத்தினார்கள்.
அது மட்டும் இன்றி பல ஆண் போட்டியாளர்களும் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்க கூறினார்கள். மொத்தம் அதிக ரெட் கார்டு வாங்கிய அவர் நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால் நெட்டிசன்களால் இந்த முடிவு ஏற்கப்படவில்லை.
அவருக்கு ஆதரவாக தற்போது வரை இணையத்தில் பல்வேறு பதிவுகளும் கமாண்டுகளும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பிரதீப்பின் நெருங்கிய நண்பரான கவின் என்று அவரை வெளியே அனுப்பியதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது இணையதள பக்கத்தில் ‘உன்னை அறிந்தவர்கள் எப்போதும் உன்னை பற்றி அறிவார்கள்’ என்று புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
கவின் மட்டுமின்றி பல முந்தைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பிரதீப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
அதன்படி கவிஞர் சினேகன் தனது X த பக்கத்தில் ‘ நீ பார்க்காத ரணங்களும் இல்லை. நீ பார்க்காத வலிகளும் இல்லை. பிரதீப். இதுவும் கடந்து போகும். வாழ்க்கை எந்த வீட்டுக்குள்ளும் இல்லை. வெளியே கிடக்கு வா’ என்று அவருக்கு ஆதரவாக பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார். இவரைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான பாவனி மற்றும் அமீர் இருவரும் ‘unfair ‘ என்று தங்களது X தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பிக் பாஸ் போட்டியாளரான நிவாசினியும் தனது X தள பக்கத்தில் பிரதீபுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்னும் பிரதீப் ஆதரவாக நெட்டிசன்களும் அவரது ரசிகர்களும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
என்னதான் அவர் தவறு செய்திருந்தாலும், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் அவரை உடனே ரெட் கார்ட் கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு அனுப்பிய கமலஹாசன் மீது பலரும் கோபத்தில் உள்ளனர். ‘பிக் பாஸ் வீட்டை விட்டு பிரதீப்பை அனுப்பியது சரியா?’ உங்களுடைய கருத்து என்ன? என்பதை நீங்களும் கமெண்டில் சொல்லுங்கள்.
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…