தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பனையூர் அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கியுள்ளார். விருப்ப மனு அளித்தவர்களில் முதற்கட்டமாக 60 பேரிடம் நடத்தப்பட்ட இந்த நேர்காணலில், ஐந்து ஐந்து பேராக அழைத்து விஜய் கலந்துரையாடினார்.
அப்போது வேட்பாளர்கள் மத்தியில் மிகவும் உருக்கமாகப் பேசிய அவர், “தனது திரையுலகப் பயணம் உள்ளிட்ட எல்லாவற்றையும் விட்டுவிட்டு முழுமையாக அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், இனி தனக்கு எல்லாமே அரசியல்தான்” என்றும் வெளிப்படையாகக் கூறினார். மேலும், அரசியலுக்கு வந்த பிறகு தனக்கு ஏற்பட்ட சவால்களைச் சுட்டிக்காட்டிய அவர், எதற்கும் துணிந்து தேர்தல் களத்தில் பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் வேட்பாளர் தேர்வில் நேரடியாகக் களமிறங்கியுள்ள விஜய், ஒவ்வொரு தொகுதியிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்ட விதம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். தன் மீது நம்பிக்கை வைத்து உழைக்கத் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொண்ட அவர், தொகுதிகளில் வெற்றி பெறுவது வேட்பாளர்களின் பொறுப்பு என்பதையும் உறுதிபடத் தெரிவித்தார்.
இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ள நிலையிலேயே, சுமார் 50 வேட்பாளர்களை அவர் இறுதி செய்துள்ளதாகவும், அவர்களை உடனடியாகத் தேர்தல் பணிகளைத் தொடங்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் இந்தத் தீவிரமான அணுகுமுறை தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…