மறைந்த பிரபல காமெடி நடிகர் எஸ் எஸ் சந்திரனின் மகனை பார்த்திருக்கீங்களா?…. இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ!…

By Begam

Published on:

மறைந்த பிரபல முன்னணி நடிகரான எஸ் எஸ் சந்திரன் அவர்களின் மகன் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நகைச்சுவை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர் மறைந்த நடிகர் எஸ் எஸ் சந்திரன். இவரை மறக்க முடியாமல் தற்பொழுது வரை இவரது ரசிகர்கள் தவித்து வருகின்றனர். 15 வயதில் நடிக்க தொடங்கிய இவர் 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமின்றி பல நாடகங்களிலும் கூட நடித்துள்ளார்.

   

நடிகர் எஸ்எஸ் சந்திரன் அவர்கள் வில்லனாக நடித்திருந்தாலும், அதிலும் காமெடி செய்து தனித்துவமான திறமையை வெளிக்காட்டி இருக்கிறார். இவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிட்டது என்று எதையும் சொல்ல முடியாது. நடித்த படங்களில் எல்லாம் தனது வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்.

இவர் நடித்த படங்களில் மிகவும் பிரபலமானவை சகாதேவன் மகாதேவன்,, தங்கமணி ரங்கமணி, பாட்டி சொல்லை தட்டாதே மற்றும் கதை நாயகன் சந்திரன் போன்ற திரைப்படங்களை இவர் தானே தயாரித்து தன்னுடைய தயாரிப்பாளர் முகத்தையும் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.

இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மாப்பிள்ளை, உழைப்பாளி போற்றி திரைப்படங்களில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதை தொடர்ந்து விஷ்ணு, ஒன்ஸ்மோர், புதுமைப்பித்தன், நாம் இருவர் நமக்கு இருவர், மனம் விரும்புதே, காக்கைச் சிறகினிலே போன்ற திரைப்படங்களிலும் சிறப்பாக நடித்துள்ளார்.

நடிப்புத்திறனை தாண்டியும், ஒரு அரசியல் பேச்சாளராக விளங்கி வந்தார். இவர் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர், துணைச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் போன்ற பதவியை வகித்து வந்தவர். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 2010ல் காலமானார். இவரது மனைவி சி. ராஜம் 2019ல் காலமானார்.

இவர்களுக்கு ரோஹித் மற்றும் ரங்கராஜன் என்ற இரண்டு மகன்களும், கண்மணி என்ற ஒரு மகளும் உள்ளார். தற்பொழுது இவரது மகன் ரோஹித் அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அவரின் புகைப்படம்….