சமூக வலைதள பிரபலமான ஜி பி முத்து நடிகை நயன்தாராவிற்கு பாசமாக எளிய கடிதம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாக ஓடி கொண்டுள்ளது. இதில் கலந்துகொண்ட 21 போட்டியாளர்களில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்டவர் ஜி பி முத்து. இவர் சமூக வலைத்தளங்களில் மிகப் பிரபலமானவர். இவர் தன்னுடைய எதார்த்தமான பேச்சினால் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.
இணையத்தில் கிடைத்த பிரபலம் மூலமாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டின் முதல் நாள் அன்றே கமலஹாசன் உடன் இவருடைய விவாதங்கள் மிகவும் நகைச்சுவையாக இருந்தது. இதை தொடர்ந்து இவர் பிக் பாஸ் வீட்டில் தனது ஒரிஜினல் முகத்தையே காத்துக் கொண்டிருந்தார். ஒருபொழுதும் நடிக்கவில்லை.
இவர் தன்னுடைய குடும்பத்தின் மீது கொண்ட பாசத்தால் பிக் பாஸ் வீட்டை விட்டு தானாகவே வெளியேறினார். 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிக் பாஸ் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இவர் தற்பொழுது பல படங்களில் பிஸியாக கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார்.
அவ்வப்போது தனது youtube பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். இவர் சன்னி லியோனி நடித்துள்ள ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பிரபல சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை நடிகர் ஜி.பி.முத்து அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் நடிகை நயன்தாராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘மதிப்பிற்குரிய நயன்தாரா அக்காவுக்கு பாசமாக எழுதும் ஜி.பி. முத்து. எனது ரொம்ப நாள் ஆசை. உங்க கூட ஒரு போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற வேண்டும் என மிகவும் ஆசைப்படுகிறேன். நீங்கள் சேலை கட்டி இருக்கும் போது உங்களை மிகவும் பிடிக்கும். இப்படிக்கு ஜி.பி. முத்து’ என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் யூகி சேது என்கின்ற சேதுராமன். பஞ்சதந்திரம் திரைப்படத்தில் கமலஹாசன் சேர்ந்து நடித்திருந்தார்.…
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…
சவுத் இந்தியன் குயினாக வளம் வருபவர் நடிகை திரிஷா. இவர் இன்று தன்னுடைய 41 வது பிறந்த நாளை கொண்டாடி…
தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன்…
தமிழ் சினிமாவில் சின்னத்திரை நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ரியோவுக்கு ஜோ திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது. இப்படத்தின்…
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ராயல்டி பற்றிய பஞ்சாயத்து பரவலாக விவாதமாகியுள்ளது. இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கான ராயல்டி பற்றி நீதிமன்றத்தில் வழக்கு…