இந்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கியும் வருகிறது. இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டுகாண 69-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி டெல்லியில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் திரைக்கலைஞர்களுக்கு தேசிய விருதை அறிவித்தார். இந்த 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் இ.வி.கணேஷன்பாபு கதை, திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்திருந்த ‘கருவறை’ ஆவணப்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், ஸ்ரீகாந்த் தேவா, இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிபெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு புஷ்பா திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத், இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து தற்பொழுது ஸ்ரீகாந்த் தேவா இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிபெற்றுள்ளார். இதோ அந்த வீடியோ…
இந்தியத் தேர்தல் களத்தில் களம் காணும் வேட்பாளர்கள், தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்யும்போதே குறிப்பிட்ட தொகையை வைப்புத்தொகையாக (Deposit) செலுத்த…
ஒரு ரயில் நிலையத்தில் ஒரு பெண் தனது சிறிய மகளுடன் ரயிலுக்காகக் காத்திருந்தார். பயணக் களைப்பு மற்றும் நீண்ட நேரக்…
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும்…
தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாளாக இன்று அமையவுள்ளது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில்…
வேத ஜோதிடத்தில் சனி பகவான் 'கர்மகாரகன்' என்று போற்றப்படுகிறார். நாம் செய்யும் நற்செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப பலன்களை…
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பந்தல் தொழிலாளி சரவணப்பெருமாள் (47). இவரது மனைவி தில்லையம்மாள் (43) அப்பகுதியில்…