Categories: CINEMA

தமிழ் சினிமாவில் பாடல்களே இல்லாமல் வந்த முதல் படம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!

1950 ஆம் ஆண்டு ஜப்பானிய திரை மேதை அகிரா குரசோவா இயக்கத்தில் உருவான ராஷோமான் திரைப்படம் உலகளவில் சினிமா ரசிகர்களை மட்டுமில்லாமல் சினிமா எடுப்பவர்கள் மத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. பலரும் அந்த கதை சொல்லும் பாணியில் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என ஆசை கொண்டனர். இந்த படத்துக்கு பிறகு ராஷோமான் எபக்ட் என்ற சொல்லே சினிமாவில் உருவாகியது.

இந்த படத்தின் தாக்கத்தால் பலரும் தங்கள் படத்தின் திரைக்கதையை ராஷொமான் வடிவில் மாற்றி உருவாக்கினர். அதில் பல படங்கள் வெற்றி பெற்று இன்றளவும் கல்ட் கிளாசிக் ஆக கொண்டாடப்படுகிறது. தமிழில் கூட விருமாண்டி மற்றும் ஆயுத எழுத்து ஆகிய திரைப்படங்கள் இந்த பாணியில் உருவானவைதான்.

ஆனால் ராஷோமான் வெளியாகி நான்கே ஆண்டுகளில் அதன் பாதிப்பில் தமிழில் ஒரு சினிமா உருவானது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் 1954 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பண்டரி பாய் ஆகியோர் நடிப்பில் எஸ் பாலச்சந்தர் இயக்கத்தில், ஏ வி எம் நிறுவனம் தயாரித்த ‘அந்தநாள்’ திரைப்படம்தான் அது.

படத்தின் தொடக்கத்திலேயே கதாநாயகன் பாத்திரம் இறந்துவிட அவரைக் கொலை செய்தது யார் என போலீஸ் துப்பறிகிறது. அவரை சுற்றியுள்ளவர்கள் அனைவரும் தங்களுக்கு தெரிந்த கோணத்தில் அவர் கொலைப் பற்றி கூறுகிறார்கள். இறுதியில் யார் கொலை செய்தது என்ற அதிர்ச்சிகரமான முடிவோடு படம் முடிகிறது. விறுவிறுப்பான இந்த படத்தில் பாடல்கள் தேவையில்லை என்பதால் பாடல்கள் இன்றியே படத்தை இயக்கியுள்ளார் எஸ் பாலச்சந்தர். இத்தனைக்கும் அப்போது படங்களில் 10க்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கும்.

இவ்வளவு புதுமைகள் இருந்தும் அப்போது இந்த திரைக்கதைக்கும் நம் ரசிகர்கள் பழக்கப்பட்டிருக்காததாலும் இந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் காலம் செல்ல செல்ல இந்த படம் ஒரு கல்ட் கிளாசிக்காக இப்போது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

vinoth

Recent Posts

ஸ்லீவ் லெஸ் உடையில்.. கவர்ச்சியான போட்டோஸ் போட்டு இளசுகளை கதறவிட்ட ஷிவானி நாராயணன்.. கிளாமர் போட்டோ ஷூட்..!

சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நடிகை ஷிவானி நாராயணன். விருதுநகரில் பிறந்த பெண். பின்னர் சென்னை…

2 hours ago

டைட்டான டாப்பில் விதவிதமா போஸ் கொடுத்து.. ரசிகர்களை கிறங்க வைத்த ரித்திகா சிங்.. லேட்டஸ்ட் கிளாமர் பிக்ஸ்..!

இறுதி சுற்று திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரித்திகா சிங். மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ்…

2 hours ago

அன்பே சிவம் படம் ஓடுலன்னதும் அப்ப வருத்தம்… ஆனா இப்ப வரைக்கும் எனக்கு நல்லதுதான் நடக்குது- சுந்தர் சி பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

2 hours ago

ஹாலிவுட் ஹீரோயின் போல மாறிய ‘GOAT’ பட நடிகை.. லைக்குகளை அள்ளி குவிக்கும் ரசிகர்கள்.. லேட்டஸ்ட் கிளிக்..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் மூலமாக அதிகம் கவனிக்கப்படும் கதாநாயகியாக மாறி இருக்கிறார் மீனாட்சி…

2 hours ago

வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காளை.. தக் லைஃப் படத்தில் மாஸாக காரில் என்ட்ரி கொடுத்த சிம்பு.. வெளியான டீசர்..!

மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்திலிருந்து சிம்பு பஸ்ட் லுக்…

3 hours ago

அப்பா 8 அடின்னா, பையன் 16 அடி பாய்வார் போல.. 1,97 ஆயிரம் கோடி பிசினஸை நடத்தும் இளைஞர்.. யார் இந்த வருண் ஜெயப்பூரியா..!

இந்தியாவில் முன்னணி வர்த்தக நிறுவனங்களின் நடத்தும் தலைவர்கள் அடுத்தடுத்து தங்களது வாரிசுகளின் கைகளுக்கு மாற்றி விடுவது வழக்கம்தான். இந்தியாவில் உள்ள…

3 hours ago