மலையாளத் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சித்தாரா. இவர் தமிழில் புது புது அர்த்தங்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, உன்னை சொல்லி குற்றமில்லை, புது புது ராகங்கள்,புது வசந்தம், புரியாத புதிர் என அடுக்கடுக்காக பல படங்களில் கமிட் ஆகி நடித்தார்.
நடிப்பில் யதார்த்தத்தையும், பார்ப்பதற்கு அக்கம் பக்கத்துக்கு வீட்டு பெண் போல், இவர் ரசிகர்கள் கண்களுக்கு தெரிந்தது தான் இவரின் மிகபெரிய வெற்றி. தமிழ் மொழி மட்டும் இன்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், என பல்வேறு மொழிகளில் 200 கும் அதிகமான படங்களில் நடித்துள்ள சித்தாரா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.
47 வயதாகும் இவர், முன்னணி நடிகையாக இருக்கும் போது ஒருவரை காதலித்ததாகவும், அந்த காதல் தோல்வியில் முடிந்ததால், திருமணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்தார். இதை தொடர்ந்து, இவரின் அப்பாவின் இழப்பு, திருமணமே வேண்டாம் என்கிற முடிவை எடுக்க வைத்ததாகவும் கூறியிருந்தார்.
வெள்ளித்திரையில் கலக்கிய இவர் தற்பொழுது சின்னத்திரையிலும் கால்பதித்து கலக்கி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே கங்கா யமுனா சரஸ்வதி, பராசக்தி, ஆர்த்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘பூவா தலையா’ என்ற புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார். நீண்ட வருடங்களுக்கு பிறகு இவரை திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…