ஒடிசா மாநிலம் புருஷோத்தம் எக்ஸ்பிரஸின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்யும் போது ஒரு குடும்பம் ‘ரயில்வே பெட்ஷீட்களை’ திருடியதாகக் கூறப்படும் ஒரு வைரல் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் பூரிக்கும் புது தில்லிக்கும் இடையே இயங்கும் அதிவேக ரயிலான புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாகச் செல்லும் மிகவும் தேவைப்படும் பாதைகளில் ஒன்றாகும். இதில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கொண்ட குடும்பம் பயணம் செய்துள்ளது.
இதனையடுத்து இரண்டு பயண டிக்கெட் பரிசோதகர்கள் (TTE) மற்றும் பிற ரயில்வே ஊழியர்களால் அந்த குடும்பம் சூழப்பட்டுள்ளது. பெட்ஷீட்களை திருடியாக அவர்களிடம் ரயில்வே அதிகாரிகள் கூடுகிறர்கள். அப்போது அந்தப் பெண் தயக்கத்துடன் ஒரு பையில் இருந்து படுக்கை விரிப்புகளை வெளியே எடுக்கிறார். இதுகுறித்து வெளியான வீடியோவில், “புருஷோத்தம் எக்ஸ்பிரஸின் முதல் ஏசியில் பயணம் செய்வது பெருமைக்குரிய விஷயம். ஆனால் பயணத்தின் போது கூடுதல் வசதிக்காக வழங்கப்படும் படுக்கை விரிப்புகளைத் திருடி வீட்டிற்கு எடுத்துச் செல்லத் தயங்காத மக்கள் இன்னும் இருக்கிறார்கள்” என்று தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி வைரலாகிவிட்டாலும், சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது குறித்த விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…