“கொஞ்சம் நகருங்க சாமி..” பெண்கள் கெஞ்சியும் மதிக்காத போலி சாமியார்.. ரயிலில் நடந்த பரபரப்பு சம்பவம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Spread the love

ஹரித்வாரிலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற 19020 எண் கொண்ட எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் (General Compartment) போலி சாமியார் ஒருவரின் சுயநலமான செயல், சக பயணிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பெட்டி முழுவதும் கால் வைக்கக்கூட இடமில்லாமல், மக்கள் மூச்சுத் திணற நின்றுகொண்டு பயணிக்கும் அளவுக்குக் கூட்டம் அலைமோதியுள்ளது. ஆனால், அங்கு வந்த சாமியார் ஒருவர், பொதுப் பெட்டியின் முழு இருக்கையையும் தனியாக ஆக்கிரமித்து சொகுசாகப் படுத்துக் கொண்டதோடு, தன் பக்கத்திலேயே ஒரு பெரிய பையையும் வைத்துக் கொண்டுள்ளார். முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் நிற்கக் கூட இடமின்றித் தவித்த நிலையிலும், அந்த சாமியார் எதைப் பற்றியும் கவலைப்படாமல் முழு சீட்டையும் பிடித்துக் கொண்டு படுத்திருந்தது சக பயணிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.

ரயிலில் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த சில பெண்கள், அந்த சாமியாரிடம் சற்று நகர்ந்து அமருமாறும், தங்களுக்குக் கொஞ்சம் இடம் தருமாறும் பலமுறை கெஞ்சிக் கேட்டுள்ளனர். ஆனால், அந்த போலி சாமியாரோ சிறிதும் இரக்கமின்றி, அவர்களைத் தன் கையால் அசைத்து விரட்டுவதிலேயே குறியாக இருந்தாரே தவிர, தன் இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட நகர மறுத்துவிட்டார். சாமியார்கள் என்ற பெயரில் உலா வரும் இதுபோன்ற சில போலி நபர்களின் சுயநலப் போக்கு, ஒட்டுமொத்த சாமியார்களின் பெயரையும் கெடுக்கும் விதமாக அமைந்திருப்பதாக இணையவாசிகள் மற்றும் சக பயணிகள் தங்கள் ஆதங்கத்தையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

அம்மா உயிரோடு இருக்காங்களா?!”.. வெள்ளத்தில் தவிக்கும் பச்சிளம் குழந்தையின் பகீர் வீடியோ.. கதறும் நெட்டிசன்கள்..!!!

வெள்ளத்தின் கொடூரப் பிடியில் சிக்கித் தன் தாயை இழந்துவிட்டோம் என்ற உண்மை கூடத் தெரியாமல், யாரோ ஒருவரால் இழுத்துச் செல்லப்படும்…

1 second ago

அவதூறு நபரை சந்தித்தாரா ஸ்டாலின்..? தரம் தாழ்ந்த பதிவுகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி.. தற்போதைய CM விஜய்யின் மாஸ் நடவடிக்கை..!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் ஆபாசப் பதிவுகளைப் பரப்புபவர்கள்…

16 minutes ago

2028-ல் மனிதன் அங்கே போவான்.. 5079-ல் உலகம் அழியும்.. பாபா வாங்காவின் அடுத்தடுத்த பகீர் கணிப்புகள்.. உறைந்து போன உலகம்..!!

உலகின் மிகச்சிறந்த மற்றும் மர்மமான தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா, சிறுவயதிலேயே பார்வையை இழந்தவர்.…

17 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..! அம்மா உணவகத்திற்குள் நுழைந்த வீணா காயத்ரி… அங்கு நடந்தது என்ன..?!

புகழ்பெற்ற கர்நாடக இசை வீணை கலைஞரான வீணா காயத்ரி, சென்னை மந்தைவெளியில் உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று உணவு…

27 minutes ago

திமுகவில் ஒட்டுமொத்தமாக மாறப்போகும் நிர்வாகிகள்?…. லிஸ்ட்டில் இருக்கும் டாப் தலைவர்கள்… ஸ்டாலினின் ‘ஆபரேஷன் க்ளீன்-அப்’…!

தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் திருச்சி…

29 minutes ago

“பெண்ணை கட்டிப்போட்டு அண்ணனும் தம்பியும் செய்த காரியம்.. செல்போனில் வீடியோ எடுத்த அவலம்.. ஆந்திராவில் அரங்கேறிய பயங்கர சம்பவம்”..!!

ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன்…

32 minutes ago