விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், மேலும் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் ஈரோடு மகேஷ். ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக களமிறங்கினார்.
இவர் தனது திறமையினால் முன்னேறி தற்போது காமெடியன், தொகுப்பாளர், நடுவர், நடிகர் என செம பிஸியாக இயங்கிக் கொண்டுள்ளார். தமிழில் பட்டப்படிப்பை முடித்த இவர் தற்பொழுது இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இவர் சின்னத்திரையில் மட்டும் அல்லாது வெள்ளித்திரையிலும் ‘சிகரம் தொடு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஈரோடு மகேசின் தந்தை திரு சந்திரசேகரன், தாயார் திருமதி மீனாட்சி.
இவர் தனது பள்ளி படிப்பை ஈரோட்டில் தான் முடித்தார். சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் ஈரோடு மகேஷ் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருந்த ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ‘அமிழ்தா’ என்ற அழகிய மகளும் உள்ளார். இவர் எப்பொழுது மேடையில் பேசினாலும் தனது வெற்றி பயணத்திற்கு காரணம் மூன்று பெண்கள் தான் என் தாய், மனைவி, மகள் என அடிக்கடி கூறுவார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஈரோடு மகேஷ். இவர் தற்பொழுது தனது மனைவியுடன் இணைந்து ரொமாண்டிக் போட்டோ சூட் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்களை காதலர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஈரோடு மகேஷ். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நம்ம ஈரோடு மகேஷா இது?’ என்ற ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஈஷா ரெப்பா. இவர் தமிழில் கடந்த 2016 ஆம்…
என்னதான் அரண்மனை 3 திரைப்படம் ஃபிளாப்பானாலும் அடுத்த சீரியஸை வெற்றி படமாக மாற்றி காட்டுகிறேன் என சவால் விட்ட சுந்தர்…
சினிமா நடிகைகளை போலவே சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளும் விதவிதமாக போட்டோ சூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அதிலும் சீரியல்களில்…
ஆண்டவர் என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்பட்டு வரும் உலக நாயகன் கமலஹாசன் தற்போது மீண்டும் பாமுக்கு வந்துள்ளார் என்று தான்…
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக…
ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து முடித்துவிட்டு ஹாட்டான போஸ் கொடுத்த போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்கு முக்காட…