நடிகர் விஜயகாந்த் கடந்த மாதம் 28-ம் தேதி உடல் நலக் குறைவால் காலமான நிலையில், இன்று வரையிலும் அவருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் இரங்கல் கூட்டம் வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துக் கொண்டே இருக்கிறது. பல முக்கிய ஹீரோக்கள் வெளிநாடுகளில் இருப்பதால், அவர்கள் சென்னை திரும்பியவுடன் அவருக்கு இரங்கல் கூட்டம் வைக்கப்படும் என ஒரு பக்கம் கூறப்படுகிறது. இதற்கிடையில், சென்னை வந்த ஒரு ஒரு நடிகர்களும், தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதுடன், அவரது மனைவி மற்றும் மகன்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், பல நடிகர், நடிகைகள் அவரது இறப்பிற்கு வராதது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக நகைச்சுவை நடிகர் வடிவேலு. வடிவேலுவை சின்னக் கவுண்டர் படத்தில் தன்னுடனேயே வரும் கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தியது விஜயகாந்த் தான். பின்னாளில் சினிமாவில் வேகமாக வளர்ந்த நடிகர் வடிவேலு, விஜயகாந்தின் வீட்டின் எதிரிலேயே தானும் வீடு வாங்கி, அவரிடம் கெத்து காட்டியதாக கூறப்பட்டது. அரசியலில் இறங்கிய பிறகு திமுகவை ஆதரிப்பதற்காக, தேமுதிக தலைவராக இருந்த விஜயகாந்தை பற்றி ஒருமையில், அநாகரீகமான முறையில் பேசியது மிகப் பெரிய பேசு பொருளாக மாறியது.
ஆனால் ஒரு போதும் வடிவேலு மீது விஜயகாந்த் கோபமடைந்ததில்லை எனவும், அவருக்கு வாய்ப்புகள் தருமாறு பலரிடம் கேட்டுக் கொண்டதாகவும், பிரேமலதா விஜயகாந்த் நேர்காணல்களில் கூறியிருக்கிறார். அப்படியிருக்க, விஜயகாந்தினுடைய இறப்புக்கு கூட வடிவேலு வராதது கோலிவுட் வட்டாரத்தையே அவருக்கு எதிராக திருப்பி விட்டிருக்கிறது எனலாம். விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்ட நிலையில், விஜயகாந்தினுடைய ரசிகர்கள், வடிவேலுவை தாக்கி விடக் கூடும் என்பதற்காகக் கூட அவர் வராமல் இருந்திருக்கலாம் என பலரும் அவருக்கு ஆதரவாக பேசினாலும் கூட, பலர் வடிவேலு மீது தங்கள் வருத்தத்தை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மூத்த பத்திரிக்கையாளர் டாக்டர் காந்தராஜ் ஒரு நேர்காணலில், விஜயகாந்த் ஒரு உலகத் தலைவரா? அவரது இறப்பிற்கு அவர் வரவில்லை, இவர் வரவில்லை என்பதற்கு என பேசியிருப்பது வைரலாகி வருகிறது. வடிவேலுவை மட்டும் குறை சொல்லும் பலர், விஜயகாந்த் எத்தனை நடிகைகளோடு நடித்திருப்பார்? அதில் எத்தனை நடிகைகள் அவர் இறப்பிற்கு வரவில்லை? அவர்கள் மீது எல்லாம் ஏன் யாரும் கோபப்படவில்லை? கண்டுகொள்ளவில்லை? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மீண்டும் சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருக்கும் வடிவேலுவை இது போல் எதிர்மறையாக சித்தரித்து அவரது வளர்ச்சியை தடுக்கும் செயல் தான் இது போன்ற பேச்சுக்கள் என அவர் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…