Categories: CINEMA

காதல் பட நடிகர் இப்ப என்ன செய்றாருன்னு தெரியுமா?…!!! நடிகர் கொடுத்த பேட்டி..!! திடுக்கிடும் தகவல்கள்..!!! உள்ளே..!!

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘காதல்’.இந்த படத்தில் இயக்குனர் காதலுக்கு சாதி மதம் கிடையாது என்பதை மிக அழகாக கூறியிருப்பார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் அது வசூலினை வாரி  குவித்தது.

இந்த படம் வெளியான போது திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தில் பரத், சந்தியா போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் பரத்துடன் இணைந்து மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்க்கும் சிறுவன் தான் அருண்.

இவரை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு அருண்  சிறப்பான நடிப்பினை இப்டத்தில் வெளிப்படுத்தி இருப்பார். இவர் அடுத்ததாக சிவகாசி படத்தில் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையை தொடங்கியவர்.

வளர ஆரம்பித்ததும் பட வாய்ப்புகள் வரவில்லை. சினிமா துறையில் இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியாத அளவிற்கு நிலைமை வந்துவிட்டது. தற்பொழுது அவர் திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வெளியானது.

சினிமா துறையை விட்டு விலகிய இவர் தற்பொழுது மர வேலைகள் செய்யும் தொழில் செய்து கொண்டிருக்கிறார். தற்சமயம் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் ‘நான் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவன். என்னுடைய பள்ளி படிப்பு காலத்தில் எனக்கு சினிமாவில் ஆர்வம் அதிகம். அதன் காரணமாக நாடகங்களில் அதிகம் நடிப்பேன்.

அப்பொழுதுதான் காதல் பட வாய்ப்பு என்னை தேடி வந்தது. அதன் மூலம் நான் மக்களிடம் மிகப் பிரபலம் அடைந்தேன். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். பின்னர் வளர தொடங்கியதும் பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.

வீட்டின் சூழ்நிலை ,குடும்ப கஷ்டம் காரணமாக நான்  சினிமா துறையை விட்டு விலகி விட்டேன். தினக்கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்த நான், தற்பொழுது ஆர்டர் எடுத்து மரவேலைகளை செய்து வருகிறேன். இதுவரை நான் எந்த பேட்டியும் கொடுத்ததில்லை.

சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த பேட்டியின் மூலம் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Begam

Recent Posts

சூட்டிங்-க்கு ஹெலிகாப்டரில் வருவாங்க.. சொந்தமா 4 கப்பல்கள் இருக்கு.. கே ஆர் விஜயா சகோதரி பேட்டி..!

தமிழ் சினிமாவில் கேஆர் விஜயா என்ற பெயரை கேட்டால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. புன்னகை அரசி என புகழப்பட்டு…

37 mins ago

தயாரிப்பாளரிடம் பணம் கொடுத்தால்தான் மியூசிக் போடுவேன்னு சொன்ன ஹாரிஸ் ஜெயராஜ்.. கடைசியில் அவர் நெஞ்சை குளிர வைத்த சம்பவம்..!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் பெறுபவர் ஹாரிஸ் ஜெயராஜ். 6 வயதிலிருந்தும் முறையாக இசையை பயிற்சியை…

1 hour ago

டிரான்ஸ்பரென்ட் சேலையில் ஹாட் போஸ்ட் கொடுத்துள்ள அஞ்சலி.. வெள்ளிச் சிலை போல் ஜொலிக்கும் வைரல் போட்டோஸ்..!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை அஞ்சலி. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல முன்னணி…

2 hours ago

ஐஸ்வர்யா ராஜஷும் இல்ல, அறந்தாங்கி நிஷாவும் இல்ல.. அந்த லேடி கெட்டப் போட்டதே இவர இன்ஸ்பயர் பண்ணி தான்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக…

3 hours ago

ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நகைச்சுவை நடிகர்.. ஆனா அடுத்த படத்தில் 5000 ரூபாய்க்கு நடித்துக் கொடுத்த நல்ல மனிதர்!

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கே ஏ…

4 hours ago

நான் உதவி பண்ணாதனால தான் சேஷு இறந்து போயிட்டாரா..? நடந்ததை வெளிப்படையாக சொன்ன சந்தானம்..!

விஜய் டிவியில் பல வருடத்திற்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சி தற்போது வரை மக்கள் மத்தியில்…

4 hours ago