2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாய வாக்குகளைக் குறிவைத்து திமுக தலைமை வியூகம் அமைத்துள்ளது. இந்த வாக்கு வங்கியை அறுவடை செய்வதற்காக ஓ. பன்னீர்செல்வத்தை (ஓபிஎஸ்) தங்களின் கூட்டணியில் இணைத்துக் கொண்டுள்ள திமுக, அவருக்கு மிக முக்கியமான பொறுப்பை வழங்கியுள்ளது. அதிமுகவின் வலுவான வாக்கு வங்கியாகக் கருதப்படும் முக்குலத்தோர் வாக்குகளை திமுக பக்கம் திருப்புவதே ஓபிஎஸ்ஸிற்கு கொடுக்கப்பட்டுள்ள முதன்மைப் பணியாகும்.
பொதுவாக முக்குலத்தோர் சமூகம் நீண்டகாலமாக அதிமுகவின் செல்வாக்கு வட்டத்திற்குள் இருந்து வருகிறது. தற்போதைய அரசியல் சூழலில், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள அந்தச் சமுதாயத்தினரின் வாக்குகளைக் கவர திமுக திட்டமிடுகிறது. டிடிவி தினகரனும் அந்த வாக்குகளைக் கவர முயன்றாலும், அவர் தற்போது அதிமுக கூட்டணியில் உள்ளதால் அவரது பிரசாரம் அந்தச் சமுதாயத்திடையே எடுபடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, ஓபிஎஸ் மூலமாக அந்த வாக்குகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற திமுக முயல்கிறது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் சுயேச்சையாகப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றார். இது எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக மீதான அதிருப்தியையே காட்டுவதாக திமுக கணிக்கிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே, திமுக தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவே, ஓபிஎஸ்ஸை தென் மாவட்டங்களில் களமிறக்கி பிரசாரத்தைத் தொடங்க வைத்துள்ளது. தென்காசி, நெல்லை, தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அவரது வருகை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாகும்.
இருப்பினும், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் செல்வாக்கைத் தாண்டி முக்குலத்தோர் வாக்குகளை முழுமையாகத் தன் பக்கம் ஈர்க்க ஓபிஎஸ்ஸால் முடியுமா என்பது மிகப்பெரிய சவாலாகும். மேலும், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் மற்றும் கள நிலவரங்கள் எனப் பல தடைகளைத் தாண்டி அவர் வெற்றி பெற்றால் மட்டுமே திமுகவின் இந்தத் திட்டம் பலிக்கும். சுருக்கமாகச் சொன்னால், தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றி மற்றும் ஓபிஎஸ்ஸிற்கு திமுக கொடுத்த ‘அசைன்மென்ட்’ ஆகியவற்றைப் பொறுத்தே ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…