தமிழக அரசியலில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவின் இரட்டை இலக்க சீட் கோரிக்கை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது. கடந்த காலத் தேர்தல் முடிவுகள் மற்றும் தற்போதைய கள நிலவரங்களைக் கணக்கிடும் பிரதான கட்சிகள், தேமுதிகவிற்கு ஒற்றை இலக்க இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என்பதில் கறாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. “விருப்பமிருந்தால் வரலாம், இல்லையென்றால் தனித்து நில்லுங்கள்” என்ற ரீதியில் இரு தரப்பிலிருந்தும் மறைமுக நெருக்கடிகள் கொடுக்கப்படுவதால், பிரேமலதா விஜயகாந்த் தற்போது ஒரு இக்கட்டான அரசியல் சூழலில் தள்ளப்பட்டுள்ளார்.
இந்தச் சூழலில், தேமுதிகவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. திராவிடக் கட்சிகளின் பிடிவாதம் தளராத பட்சத்தில், கௌரவமான இடங்களுக்காக பிரேமலதா காத்திருப்பாரா அல்லது விஜயகாந்த் பாணியில் ‘தனித்து போட்டி’ என அதிரடி முடிவெடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம், புதிதாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் தேமுதிக சாய வாய்ப்புள்ளதா என்ற விவாதங்களும் கிளம்பியுள்ளன. எதுவாக இருந்தாலும், தனது கட்சியின் வாக்கு வங்கியையும் தொண்டர்களின் உற்சாகத்தையும் தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பிரேமலதா, விரைவில் ஒரு இறுதி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை வாக்குச்சாவடியில் இன்று நடைபெற்ற கத்திகுத்துச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல்…
பெங்களூரு பாகலகுண்டே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் - பிரியா தம்பதியினர், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி…
பெங்களூரு அபிகெரே பகுதியில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மற்றும் அவரது மனைவி, ஒரு இஸ்லாமிய இளைஞரை நோக்கி இனவெறி மற்றும்…
தேர்தல் களத்தில் ஜனநாயகத்தின் நேர்மையை நிலைநாட்டும் ஒரு வலிமையான அறிவியல் ஆயுதமாக இந்த "அழியாத மை" (Indelible Ink) திகழ்கிறது.…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வாக்காளர்கள் மத்தியில் எழும் மிக முக்கியமான அச்சம் "கள்ள…
தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலையிலேயே…