தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் தொண்டர்களுக்கு, நடிகை திவ்யா சத்யராஜ் விடுத்துள்ள சவால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ், ஒரு கட்சியின் தலைவருக்கு தனது தொண்டர்களின் பெயர்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார். குறிப்பாக, “விஜய் அவர்களால் பேப்பரைப் பார்க்காமல் தனது கட்சியின் 10 தொண்டர்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா?” என்று கேள்வி எழுப்பிய அவர், அடுத்த 3 நாட்களுக்குள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு த.வெ.க தொண்டர்களுக்கு நேரடி சவால் விடுத்துள்ளார்.
மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்ற தெளிவான புரிதல் இல்லாமல், தேர்தல் அறிக்கையைப் பார்த்துப் பிறகு சொல்கிறேன் என்று கூறுவது ஏற்புடையதல்ல என்றும் திவ்யா சத்யராஜ் விமர்சித்துள்ளார். நோயாளிக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதைப் புத்தகத்தில் படித்துவிட்டு வந்து சொல்கிறேன் என்று கூறும் மருத்துவரை யாரும் நம்பமாட்டார்கள் என்பதை உதாரணமாகக் காட்டிய அவர், மக்களின் தேவைகளை அறிந்து செயல்படாத ஒருவரை மக்கள் எப்படி நம்பி வாக்களிப்பார்கள் என்று கேள்வி எழுப்பினார். விஜய்யின் அரசியல் அணுகுமுறையை விமர்சிக்கும் வகையில் அமைந்த திவ்யா சத்யராஜின் இந்த அதிரடி பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சிவகங்கை அருகே 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து…
பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவி அபினிஷா, நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 495…
சொந்தத் தாயாலேயே பல ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மகன் ஒருவன், அந்தத் தாய்க்குப் பிறந்த இளைய குழந்தைக்குத் தானே…
பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட நிதி அமைப்புகளுக்கு மத்திய நிதியமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எரிபொருள் சிக்கன நடவடிக்கை மற்றும் தேவையற்ற…
தென்னாப்பிரிக்காவின் வெல்வர்டீன்ட் பகுதியில், 37 வயதான ஹியூகோ ஃபெரைரா தனது 8 நாள் பெண் குழந்தையை மிகவும் கொடூரமாகப் பாலியல்…
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே, பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த 8 வயது…