தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான வெற்றிமாறன் தொடர்ந்து அசுரன் வரை வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்துள்ளார்.இவர் ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக உள்ளார்.
ஏனென்றால் இவரின் இயக்கத்தில் வெளி வந்த பல திரைப்படங்கள் மெகாஹிட் திரைப்படங்களாக அமைந்துள்ளது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் விருதுகளை வாரியும் குவித்துள்ளது. இவர் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் பல விருதுகளையும் வென்றது நாம் அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் இவர் நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு வெளியாகவுள்ள ‘விடுதலை 2’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் மாகாணத்தில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
இதில் விடுதலை 1 மற்றும் 2 ஆகிய இரண்டு படங்களும் திரையிடப்பட்டுள்ளன. படத்தை பார்த்தவர்களை தொடர்ந்து 10 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டியுள்ளனர். அந்த வீடியோ கூட இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் ரோட்டர்டாம் சென்றுள்ள இயக்குனர் வெற்றிமாறன் தனது மனைவி, மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் பாடகியாக வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார். இவரும்…
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் நடிகை ஜோதிகா. 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 18…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…
நீண்ட இடைவெளிக்குப்பின் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்த சுதீப் சரங்கி அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனுஷ் நடிப்பில்…
சென்னையில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிடம் தொடர்பான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக…
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ராம்சரன். மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் என்று…