Categories: CINEMA

நடிகர் சரத்குமார் மீது தனுஷின் தாயார் போட்ட வழக்கு.. என்ன நடந்தது தெரியுமா..? நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

நடிகர் சரத்குமார் அடுக்குமாடி குடியிருப்பில் பொதுவான பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொண்டதாக நடிகர் தனுஷின் தாயார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் சரத்குமார்.

90’ஸ் காலகட்டத்தில் ஹீரோவாக கலக்கி வந்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகின்றார். நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பத்திரிக்கையாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகின்றார். இவர் மீது நடிகர் தனுஷின் தாயார் ஒரு வழக்கு பதிவு செய்திருந்தார்.

சென்னை டி நகர் ராஜமன்னார் தெருவில் உள்ள கோல்டன் அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் நடிகர் தனுஷின் தாயார் விஜயலட்சுமி உரிய அனுமதியுடன் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி, குடியிருப்பில் மேல் மாடியில் மற்றவர்கள் பயன்படுத்துவதை நடிகர் சரத்குமார் தடுப்பதாகவும் தரைத்தளத்தில் இருக்கும் நடிகர் சரத்குமார் சட்ட விரோதமாக பொது பகுதியை ஆக்கிரமித்து வணிகரீதியாக பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தோம். சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர் மற்றும் செந்தில்குமார் விசாரணை செய்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காஜா மொய்தின் நடிகர் சரத்குமார் குடியிருப்பின் பொதுவான பகுதிகளை மற்ற குடியிருப்பு வாசிகள் பயன்படுத்துவதை தடுத்து சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகிறார்.

இது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை மாநகராட்சி மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் இந்த விசாரணை தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சொன்ன சொல்லை காப்பாற்றும் ராகவா லாரன்ஸ்.. விஜயகாந்த் மகனுக்காக செய்யப் போகும் மிகப்பெரிய விஷயம்..!

சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

25 நிமிடங்கள் ago

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

2 மணி நேரங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

2 மணி நேரங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

3 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

5 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

5 மணி நேரங்கள் ago