விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வந்து பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. 70 நாட்களை கடந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டது . தற்பொழுது வரை பத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற வைல்ட் காடு என்ட்ரி போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு ஜோவிகா வெளியேற்றப்பட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக எலிமினேஷன் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.இதை தொடர்ந்து அடுத்த வாரத்திற்கான ஓபன் நாமினேஷன் தற்பொழுது நடைபெற்றுள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் மோசமாக பேசி வன்மத்தை கக்கினர்.
இந்த வார இறுதி எபிசோடில் தான் கமல் கூறினார் வன்மம் இருக்கும் இடத்தில் என்டர்டைன்மெண்ட் எப்படி வரும்? என்று அனால் அதை இவர்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. குறிப்பாக கூல் சுரேஷ் விசித்ராவை ‘தமிழ்நாட்டில் இருக்கவே நீங்க தகுதி இல்லை என்றும், விசித்ரா அடுத்தவன் குடும்பத்தை கெடுப்பதாகவும், அவரை பச்சோந்தி எனவும் கூறி நாமினேட் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram