சினிமாவில் வாய்ப்பு தேடுவதற்காக கேப்டன் விஜயகாந்த் எடுத்த முதல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்…

By Samrin

Published on:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜயகாந்த்.இவர் மதுரையை பூர்விகமாக கொண்டவர்.இயற்பெயர் விஜய்ராஜ்  அழகர்சாமி. சினிமாவிற்காக தன் பெயரை விஜயகாந்த்  என்று மாற்றிக்கொண்டார்.சின்ன வயதிலேயே சினிமாவின் மீது  ஆர்வம் கொண்டவார். இவர் முதன் முதலில் 1979 ஆம் ஆண்டு வெளியான  ‘இனிக்கும் இளமை’படமானது மக்கள் நல்ல வரவேற்பு கிடைக்க வில்லை.

   

அதன் பிறகு  1980 ஆம் ஆண்டு  வெளியான ‘தூரத்து இடிமுழக்கம்’ படத்தின் மூலம்  மக்கள் மத்தியில்  மிகுந்த வரவேற்பு பெற்றார்.எஸ்.ஏ.சந்திரசேகரன்  இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் மூலமாக  தனக்கான ரசீகர் பட்டாளத்தை  உருவாக்கினார்.இப்படமானது  மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும்  ரீமேக் செய்யப்பட்டது.

1984 ஆம் ஆண்டு  வெளியான ‘வைதேகி காத்திருந்தாள்’படமானது வெற்றிப்படமாக அமைந்தது.  அதே ஆண்டு   வேங்கையின் மைந்தன், சபாஷ் உள்பட 18 படங்கள்  இவர் நடிப்பில்  வெளியானது .நாயகனாக ஒரு நடிகரின் படம் ஒரு வருடத்தில் 18 வெளியானது, இன்றுவரை முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது.ஆரம்பத்தில் விஜயகாந்தின் கறுப்பு நிறம் காரணமாக முன்னணி நடிகைகள் அவருடன் ஜோடியாக நடிக்க மறுத்தனர்.

இவரின் தொடர் வெற்றிகளுக்குப் பிறகு விஜயகாந்துடன் நடிக்க ஒருகாலத்தில் புறக்கணித்தவர்களே அவருடன் நடிக்க போட்டி போட்டனர்.தமிழின் முதல் 3டி படமான ‘அன்னை பூமி’ படத்தில்  நடித்தார் .ஆக்ஷன் படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.’நானே ராஜா நானே மந்திரி’ படத்தில் முதல்முதலாக காமெடி காட்சிகளில் நடித்தார். நகைச்சுவையை மையப்படுத்தி வந்த முதல் விஜயகாந்த் படம் இது.1985 ஆம் ஆண்டு வெளியான ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படமானது  எவர்கிரீன் படமாக  அமைந்தது,

தமிழில்  கூலிக்காரன்,உழவன் மகன் ,பூந்தோட் காவல்காரன் ,செந்தூரப்பூரே நல்லவன்,புலன்விசாரணை,சத்ரியன்,ஆலயம் புரொடக்ஷன்ஸ்,போன்ற பல படங்களில்நடித்துள்ளார். அதன் பிறகு அரசியல் கட்சி தொடங்கிய பிறகு விஜயகாந்த் படங்களில் நடிப்பதை குறைத்தார். ஒருகட்டத்தில் முழுமையாக நடிப்பதையே நிறுத்தினார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘விருதகிரி’.

நடிகர் விஜயகாந்த் பிரேமலதா என்பவரை 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.தற்போது இவர் சினிமாவில் வாய்ப்பு தேடும் பொழுது எடுத்த முதல் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.