உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞர், தனது காதலியுடன் அங்குள்ள ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். தனிமையில் இருந்தபோது, நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற ஆசையில் அவர் அளவுக்கு அதிகமான ஊக்க மாத்திரைகளை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்திலேயே அதன் வீரியம் தாங்காமல் அஜய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனால் கடும் அதிர்ச்சியும் பயமும் அடைந்த அவரது காதலி, அஜயை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தனது காதலன் இறந்துவிட்டதை அறிந்த அந்தப் பெண், போலீஸ் விசாரணைக்கு அஞ்சி அங்கிருந்து ரகசியமாகத் தப்பி ஓடிவிட்டார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அளவுக்கு அதிகமான மாத்திரை உட்கொண்டதே உயிரிழப்புக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என அவர்கள் விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க போலீசார் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…