பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிஹார் மாநிலம் பகல்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குடியிருப்பில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது உயிரிழந்த நிலையில் அம்ரிதா இருந்தார்.
அவரது சகோதரி அம்ரித்தாவின் அறைக்கு மாலை 3:30 மணிக்கு சென்றிருந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார் .பின்னர் அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சில படங்களில் நடித்துள்ள அம்ரிதா பாண்டே பல வெப் சீரிஸ்களிலும் சீரியல்களிலும் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிரதிஷோத் வெப் சீரியஸ் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமா வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.
இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவர் தற்கொலை முடிவு எடுத்துள்ளார். மேலும் அவர் இறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தனது whatsappபில் ‘இரண்டு படகுகளில் வாழ்க்கை உள்ளது. அப்படி ஏன் பயணிக்க வேண்டும். அதற்கு படகை மூழ்கடித்து என்னுடைய பாதையை எளிமையாக்கி கொள்ளலாம்’ என்று ஸ்டேட்டஸ் வைத்திருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்நடிகர் சூர்யா. தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே…
இயக்குனர் சங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'காதல்'. இந்த படத்தின்…
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி விஜய் என்றாலே ரசிகர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்…
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும்…
தமிழ் இலக்கிய உலகில் தன்னுடைய நாவல்கள் மற்றும் சிறுகதைகள் மூலமாக இளைஞர்களையும், இளைஞிகளையும் வெகுவாகக் கவர்ந்தவர் பாலகுமாரன். அவரது எழுத்துகள்…
இந்திய சினிமாவில் 1500 படங்களுக்கு மேல் நடித்த ஒரே நடிகர் என்ற சாதனையைப் படைத்தவர் ஆச்சி மனோரமா. 50 ஆண்டுகளுக்கும்…