#image_title
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
அவர் இயக்குனர் ஆனதும் முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அதுமட்டுமில்லாமல அவர்களை நட்சத்திரங்களாக உருவாக்கினார். அவர் அறிமுகப்படுத்திய ராதா, ரேவதி, ராதிகா, ரேகா உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் என பெயரெடுத்தனர்.
இந்நிலையில் 16 வயதினிலே படத்துக்கு பிறகு அவர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் கூட இயக்க வில்லை. ரஜினியே விரும்பி பாரதிராஜா இயக்கத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். அப்போதுதான் பாரதிராஜா இயக்கம் மற்றும் தயாரிப்பில் கொடி பறக்குது திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அப்போது ரஜினிகாந்த் தன்னுடைய சம்பளமாக 30 லட்சம் ரூபாய் வாங்கி வந்துள்ளார். ஆனால் பாரதிராஜாவிடம் வெறும் முன்பணமாக 5 ரூபாய் மட்டும் வாங்கிக்கொண்டு அந்த படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார். இந்த படம் ரஜினியின் மாஸ் ஸ்டைலுக்காக பாரதிராஜா தன் பாணியை விட்டு இறங்கி வந்து இயக்கிய திரைப்படம். ஆனால் அது ரஜினி படமாகவும் இல்லாமல் பாரதிராஜா படமாகவும் இல்லாமல் இருந்ததால் இரண்டு தரப்பு ரசிகர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால் படம் நல்ல தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்டு இருந்தது.
படம் ரிலீஸான பின்னர்தான் பாரதிராஜா ரஜினிக்கான சம்பளமாக 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படம் அட்டர் ப்ளாப் ஆகிவிட்டபடியால் அந்த 30 லட்ச ரூபாயிலும் 10 லட்ச ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டு 20 லட்ச ரூபாயை மட்டும் சம்பளமாக பெற்றுக் கொண்டுள்ளார்.
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…
தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில் அதில் நடிகர் விஜய் பேசியது…
தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட…
தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் வடிவேலு. இந்த படத்தில் இடம்பெற்ற போடா…