“நடத்தை சந்தேகம்”… மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர கணவன்… தர்மபுரியில் பெரும் அதிர்ச்சி….!

Spread the love

தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஜெல்திம்மனூர் கிராமத்தில் மிகவும் அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை பூ மார்க்கெட் தொழிலாளியான பாக்கியராஜ் (38) என்பவர், தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, அவரைத் துக்கிக் கொன்றுள்ளார். பாக்கியராஜ் மற்றும் நிவேதிதா (28) தம்பதியினருக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகின்றன, இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக மனைவி மீது சந்தேகம் கொண்ட பாக்கியராஜ், அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்தத் தகராறுகளின் விளைவாக, நிவேதிதா தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்தார். உறவினர்களின் சமாதான முயற்சியால், அவர் மீண்டும் கணவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். இருப்பினும், பாக்கியராஜின் சந்தேகம் குறையவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நிவேதிதா மீண்டும் தனது கணவருடன் வசித்து வந்த நிலையில், நேற்று அதிகாலை மீண்டும் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பாக்கியராஜ் கத்தியால் தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் நிவேதிதா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்திற்குப் பிறகு பாக்கியராஜ் நேராக பஞ்சப்பள்ளி காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

5 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

5 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

7 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

8 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago