கோவில் யானை தாக்கியதால் உயிரிழந்த பாகன் – யானையை பார்த்த பாகனின் மகள்கள் என்ன செஞ்சிருக்காங்கன்னு பாருங்க!

Spread the love

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருச்செந்தூர் முருகன் விளங்குகிறது. இக்கோவிலில் தெய்வானை என்ற கோவில் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அந்த யானை ஆசிர்வாதம் அளிக்கிறது. தெய்வானை யானையை உதயகுமார் என்ற பாகன் பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி கோவிலில் இருந்த போது பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசிபாலன் ஆகியோரை தெய்வானை யானை ஆக்ரோஷமாக தாக்கியது. இதில் அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில் பாகன் உதயகுமாரின் மகள்கள் அக்சரா மற்றும் அகல்யா இருவரும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இன்று வந்தனர். தெய்வானை யானை பராமரிக்கப்படும் இடத்துக்கு சென்று யானைக்கு தர்பூசணி பலாப்பழம் கரும்பு செவ்வாழை ஆப்பிள் ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை வழங்கினர். அப்போது தெய்வானை யானை உற்சாகமாக அவர்கள் கொடுத்த பழங்களை வாங்கி உண்டது. பிறகு இருவரையும் தனது தும்பிக்கையால் வருடி தனது அன்பை வெளிப்படுத்தியது. அதன் பிறகு பெண்கள் இருவரும் யானையின் காலில் விழுந்தனர். அவர்களை யானை தும்பிக்கையால் ஆசீர்வாதம் செய்து அவர்களை வழியனுப்பியது. இந்த காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

Elango

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

31 minutes ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

37 minutes ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

41 minutes ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

1 மணத்தியாலம் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

1 மணத்தியாலம் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

1 மணத்தியாலம் ago