Categories: CINEMA

வளர்த்து விட்டவரயே மதிக்காமல் இருக்கும் பிரதீ.. ஹீரோவானதால் தலைக்கு ஏறிய மிதப்பில் திரியும் மாமா குட்டி..

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி பட தயாரிப்பு நிறுவனத்தின் அதிபரான ஐசாரி கே. கணேஷ் பிரதீப் அவர்களை மீண்டும் படம் இயக்குவதற்காக அழைத்துள்ளார், ஆனால் பிரதீப் ரங்கநாதன் அவர்கள் செய்த காரியம் என்ன தெரியுமா?. 2019 ஆண்டு பிரதீப் ரங்கநாதன் அவர்கள் இயக்கத்தில் ஜெயம் ரவி, யோகி பாபு, காஜல் அகர்வால், வருன், சமியுத்தா கெட்ஸ், கவிதா போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்து, படம் வெளியாகி திரையரங்கில் மாபெரும் வெற்றியை கண்டது. 90 காலகட்டத்தில் எதிர்பாராமல் நடந்த விபத்தால் கோமாவிற்கு சென்ற கதாநாயகன் 10 வருடம் கழித்து தற்போது இருக்கும் காலகட்டத்தில் கோமாவில் இருந்து கண் விழித்து இந்த காலகட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் அதற்கு இடைப்பட்ட நேரத்தில் நடக்கும் காமெடி டிராமா மற்றும் கருத்துக்களை வெளி கொண்டு வரும் கதையாக இப்படம் அமைந்துள்ளது. இப்படம் பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கும் ஜெயம் ரவி அவர்களுக்கும் சினிமாவில் அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு சென்றது என்று கூறலாம். இயக்குனர், இப்பட வெற்றிக்கு தயாரிப்பாளர் கணேஷ் அவர்கள் தன் மேல் வைத்த நம்பிக்கைதான் காரணம் என்று பல மேடைகளில் கூறி இருக்கிறார்.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி பட வெற்றிக்குப் பின் தயாரிப்பாளர் கல்பாத்தி அககோரம் அவருடன் இணைந்து “லவ் டுடே” என்ற படத்தை இயக்கி இவரே நடித்து இரண்டாவது படத்திலே 100 கோடி கிளப்பில் இணைந்து இந்திய அளவில் மாபெரும் வெற்றியை கண்டார். லவ் டுடே படத்தில் இவர் இயக்கத்தின் திறமையை தாண்டி நடிப்பின் திறமை பெரும் அளவு பேசப்பட்டு வந்தது, அதனால் அடுத்தடுத்து இவர் நடிப்பதற்கு பல படங்கள் வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறது, அந்த வரிசையில் ஒன்றுதான் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்கத்தில் LIC என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரதிப் ரங்கநாதன்.

இந்த சமயத்தில்தான் முதல் படமான கோமாளி தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் மீண்டும் நம் கூட்டணியில் ஒரு படம் இயக்குவோம் என்று பிரதீப் ரங்கநாதன் அவர்களை அழைத்துள்ளார். ஆனால் பிரதீப் ரங்கநாதன் அவர்கள் தற்போது இவருக்கு எந்த பதிலும் அளிக்காமல், இயக்குனர் பதவியை சற்று நாள் தள்ளி வைத்துவிட்டு நடிப்பதில் முழு ஆர்வம் காட்டி வருகிறார். பிரதீப் ரங்கநாதன் வெற்றி தலைக்கு எறியதோ என்னமோ? முதல் பட வெற்றிக்கு காரணமாக இருந்த தயாரிப்பாளரையே தற்போது உதாசீனம் படுத்தி வருகிறார். இதற்குப் பல ரசிகர்கள் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

3 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

4 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

18 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

19 மணி நேரங்கள் ago