நடிகர் அசோக் செல்வன், தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களால் ஒருவராக வலம் வருபவர். ஓ மை கடவுளே படத்தில், விரும்பாத மனைவியுடன் வாழும் கணவர்களின் மனநிலையை அப்படியே பிரதிபலித்து நடித்திருப்பார். சமீபத்தில் ஆக்ஷன் திரில்லர் படமான போர்த்தொழில் படத்தில், மிக பக்குவப்பட்ட ஒரு நடிப்பை அசோக் செல்வன் தந்திருப்பார். சமீபத்தில்தான் நடிகர் அருண்பாண்டியனின் மகள், நடிகை ரம்யா பாண்டியனின் சகோதரி, கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துக்கொண்டார். அசோக் செல்வன் மிகவும் சிவப்பாக உள்ள நிலையில், அவரது மனைவி கீர்த்தி பாண்டியனின் நிறம் குறித்து சிலர் விமர்சித்து பேசியுள்ளனர்.
இதுகுறித்து அசோக் செல்வனின் தாயார், கீர்த்தி பாண்டியனின் மாமியார் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, எப்படி என் மருமகள் கீர்த்தி குறித்து இவர்கள், இப்படி மோசமாக பேசுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. அவள் நிறம் ஒரு பொருட்டே அல்ல. அவளது நல்ல குணம். மனசு இப்படி எத்தனையோ உயர்ந்த குணங்களை அவளிடம் பார்க்க முடியும். இதை பற்றி படித்தால், அசோக் செல்வன் வருத்தப்படுவான் என புரியாமல், கண்டதையும் எழுதுகின்றனர். ஒருவர் பற்றி டிஸ்கசன் செய்வது தவறு என்று கூட அவர்களுக்கு புரியவில்லை. கவிஞர் வைரமுத்து சொன்ன கவிதை போல, ஊர்வாயை மூடுவது கஷ்டம். உன் செவிகளை மூடிக்கொள்வது சுலபம் என்பதை நான் பின்பற்றுகிறேன்.
அசோக் செல்வன், 10ம் வகுப்பு படிக்கும்போது எந்நேரமும் கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருப்பான். அதனால், மிகவும் கருத்து நிறம் மங்கி போய்விட்டான். இப்படி ரசகுல்லா மாதிரி இருந்த பையன் குலோப்ஜாமுன் மாதிரி மாறிவிட்டாயே என்றால், இரண்டுமே இனிப்புதானம்மா என்பான். கிரவுண்டில் வெயிலில் விளையாடாமல் அப்புறம் எப்படி உன் பையன் கிரிக்கெட்டில் ஜெயிக்க முடியும் என்று கேட்பான். அவனுக்கு நிறம் பற்றி பேசினாலே எப்போதும் பிடிக்காது. ஏதாவது பங்க்ஷன் போயிட்டு வந்தால், அந்த பெண் அழகு, சிவப்பாக இருந்தாள் என்று வாய்தவறி கூறிவிட்டால் கூட, வெள்ளையாக இருப்பதை மட்டுமே ஏம்மா அழகாக நினைக்கிறீர்கள் என என்னிடம் வாக்குவாதம் செய்வான். ஒரு பேச்சுக்கூட நிறத்தை உயர்வாக பேசக்கூடாது என்பான், என்று அசோக் செல்வனின் அம்மா இதில் கூறியிருக்கிறார்.
தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…
சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…
தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…
தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆகவும் சரி வில்லியாகவும் சரி தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல…
பிரபல நடிகையான அமலா புதுபாடகன் என்ற திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தில் பாதி சம்பளமே வாங்காமல் நடித்தாராம். இதனை படத்தின்…