#image_title
பிரபல நடிகரான அரவிந்த்சாமி தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தின் மூலம் அரவிந்த்சாமி தனது திரை பயணத்தை ஆரம்பித்தார்.
ரோஜா, பம்பாய், இந்திரா, மின்சார கனவு, அலைபாயுதே உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இதில் ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் அரவிந்த்சாமிக்கு மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்று தந்தது. இன்று நடிகர்களின் சாமி தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரவிந்த்சாமி பல சுவாரசியமான அனுபவம் குறித்து நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
அதாவது தளபதி படத்தின் ஷூட்டிங் நடந்த போது அரவிந்த்சாமி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று விட்டார். மிகவும் களைப்பாக இருந்ததால் அங்கிருக்கும் ஒரு அறையில் இருந்த மெத்தையில் அரவிந்த்சாமி படுத்த தூங்கிவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து அரவிந்த்சாமி எழுந்து பார்த்தபோது தான் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக ஒதுக்கப்பட்ட அறை என்பது தெரியவந்தது.
அந்த அறையின் தரையில் ஒருவர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அது வேறு யாருமில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அதன் பிறகு தான் இவ்வளவு நேரம் ஓய்வெடுத்தது சூப்பர் ஸ்டாரின் அறை என்பது அரவிந்த்சாமிக்கு தெரியவந்தது. அவரை எழுப்பாமல் கோபமும் படாமல் ரஜினிகாந்த் தரையில் படுத்து தூங்கியுள்ளார். இதனை தன் வாழ்வில் மறக்கவே மாட்டேன் எனவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி அரவிந்த்சாமி பெருமையாக பேசி உள்ளார்.
நடிகை மீரா கிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் அபிராமி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே…
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாலிவுட்டில்…
நடிகை சமந்தா மாற்று மருத்துவம் குறித்து சொன்ன அட்வைஸ்க்கு மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது…
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2828 ஏடி திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி…
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விப் படங்கள் கொடுத்தாலே அந்த இயக்குனரை ஓரம் கட்டிவிடுவார்கள். ஆனால் இயக்குனர் பிரபு சாலமன்…
பிரபல நடிகரான சரத்குமார் கடந்த 1986-ஆம் ஆண்டு ரிலீசான சின்ன பூவே மெல்ல பூவே பேசு என்ற படத்தில் நடித்து…