கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய இரு குற்றவாளிகள் போக்சோ சட்டத்தின்கீழ் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தச் சம்பவத்தில் புதிய திருப்பமாக சிறுமியின் உடல் அவரது தாயாருக்குத் தெரியாமலேயே அவசர அவசரமாகத் தகனம் செய்யப்பட்டுள்ளதாகப் பரபரப்புப் புகார் எழுந்துள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த சிறுமியின் தாயார், மருத்துவமனையில் உடற்கூராய்வு (Postmortem) முடிந்த பிறகு தனது மகளின் முகத்தைக் கூடத் தன்னிடம் காட்டவில்லை என்று கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மருத்துவமனையின் பின்புற வாயில் வழியாக மகளின் உடலை எடுத்துச் சென்று, தன்னிடம் எந்தவொரு அனுமதியோ அல்லது கையெழுத்தோ பெறாமல், தனக்குத் தெரிவிக்காமலேயே உடலைத் தகனம் செய்துவிட்டதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விவகாரம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், காவல்துறையின் செயல்பாடுகள் மீதான சந்தேகங்களையும் வலுக்கச் செய்துள்ளது.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…
பொதுமக்களிடம் ரேஷன் கடை ஊழியர்கள் மிகவும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் காந்திராஜ் அறிவுறுத்தியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்குச்…